அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 30 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 12]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். சலபுக் கொள்கை வழிகேடு என விமர்சித்துவிட்டு, அரபு நாட்டுச் சலிக்காக 'நாங்களும் சலபுகள் தான்' என்று அரபியில் கடிதம் அனுப்பியதை அம்பலப்படுத்தினோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் ததஜ ஜமாஅத்திற்கு எழுதித்தரப்படுகிறது. அதனால் அந்த பள்ளிக்கு ததஜ உரிமை கொண்டாடி இப்போது வென்றெடுத்துள்ளதை அனைவரும் அறிவோம். இந்த பள்ளிவாசல் பிரச்சினை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், தொண்டியைச் சேர்ந்த சகோதரர் அப்துர்ரஹ்மான் மன்பஈ அவர்கள் இஸ்லாம் கல்வி டாட்.காமில் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில், ''எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் தங்கள் ஜமாஅத்தின் பெயரால் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கே அந்த பள்ளி சொந்தம் என்று ததஜவினர் உரிமை கொண்டாடுகின்றனர். அது நியாயம்தான். இதே நியாயத்தின் அடிப்படையில் ஜாக் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள கடயநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான், திருச்சி தவ்ஹீத் பள்ளிவாசல் ஆகியவற்றை ததஜவினர் ஜாக்கிடம் ஒப்பைடைக்கத்தயாரா? என்று எழுதியிருந்தார்.

இதற்கு தனது அதிகராப்பூர்வ இணையதளத்தில் பதிலளித்த அறிஞர் பீஜே, ''எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் ஒரு தனிநபரின் சொந்த பணத்தில் கட்டப்பட்டு, அவராலேயே நிர்வாகமும் செய்யப்பட்டது. இதில் எஸ்.பி.பட்டினம் ஜமாத்தினரின் சல்லிக்காசும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கும், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானும் இந்த நிலையில் உள்ளதா? இப்பள்ளிகளின் நிலம் வாங்குவதற்காகவும், பள்ளிவாசல் கட்டுவதற்காகவும் உடலாலும் பொருளாலும் உழைத்தவர்கள் தவ்ஹீத் சகோதரர்கள். சுன்னத் ஜமாத்தினரின் கடும் எதிர்ப்புகள் வந்தபோதெல்லாம் பள்ளியைக் காத்தவர்கள் தவ்ஹீத் சகோதரர்கள். எனவே இந்த பள்ளிகளையும் எஸ்.பி.பட்டினம் பள்ளியையும் ஒப்பிடுபவர் மூளை குழம்பியவராகத் தான் இருக்கவேண்டும்'' என்று அதில் சாடியிருந்தார். பார்க்க இணைப்பு;

இதில் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கும், மேலப்பாளையம் மஸ்ஜிதுல் ரஹ்மானும் முழுக்க முழுக்க தவ்ஹீத் சகோதரர்களின் பணத்தாலும், உடல் உழைப்பாலும் தான் கட்டப்பட்டது. எனவே அதற்கு தவ்ஹீத் சகோதர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் என்று அறிஞர் பீஜே சொன்னது உண்மையா? உண்மையில் இப்பள்ளிகளை காட்டித்தந்தது யார்? முதலில் மேலப்பாளையம் விசயத்தைப் பார்ப்போம். அந்த பள்ளி அஹ்மத் அல் அஹ்மத் என்ற அரபி காட்டித்தந்தது என்று பீஜேயும்-லுஹாவும் அளிக்கும் வாக்குமூலத்தை இந்த வீடியோவில் காணுங்கள்;

இந்த வீடியோவில் அஹ்மத் அல் அஹ்மத் என்ற அரபிதான் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியைக் கட்டித்தந்தவர் என்பதை பீஜேயும் லுஹாவும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள். அப்படியானால் தவ்ஹீத் சகோதரர்களின் பொருளாதாரத்தால் தான் இப்பள்ளி கட்டப்பட்டது என்று பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யல்லவா? பீஜே சொல்வது போன்று தவ்ஹீத் சகோதரர்கள் பணத்தில் கட்டப்பட்டது என்றால், சில அரபிக் கடிதங்களை இங்கே வைக்கிறோம். இதுபோன்று சம்சுல்லுஹா அவர்களால் அரபியில் எழுதப்பட்ட எராளமான கடிதங்கள் நம்மிடம் உண்டு. தேவைப்பட்டால் அனைத்தையும் வெளியிடுவோம். 


இந்த அரபிக்கடிதங்கள் தொண்டியிலிருந்தும், மேலப்பாலயத்திளிருந்தும் பிழைக்கப்போன தமிழனுக்கு எழுதிய கடிதங்கள் என்று பீஜே சொல்வாரா? அரபு நாட்டு சல்லியை வெறுக்கும் பீஜே, அந்த அரபு நாட்டில் பிறந்த ஒருவரால், அரபு நாட்டு சல்லியால் கட்டப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மானை விட்டு வெளியேறி தனது ஜமாஅத் தூய்மையானது என்று காட்டுவாரா?

மேலும், மேலப்பாளையம் பள்ளிவாசலைக் கட்டிக் கொடுத்த அஹ்மத் அல் அஹ்மத் என்றும் அரபி, லுஹாவுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளார் என்பதை மேற்கண்ட வீடியோவில் லுஹா வார்த்தயிலேயே கேட்டீர்கள். மதீனா பல்கலைக் கழகத்தில் பயின்ற சில மதனிகள், சம்பளம் பெறுவதை விமர்சிக்கும் பீஜே, அஹ்மத் அல் அஹ்மத் எனும் அரபியிடம் சம்பளம் பெற்றுவந்த தனது சுப்ரீம்லீடர் லுஹா அவர்களை மட்டும் கண்டுகொள்ளாதது ஏன்? 

மேலும், பள்ளிவாசல் வகைக்காக அஹ்மத் அல் அஹ்மத் தந்த தொகையில் லுஹா மீது பொருளாதாரக் குற்றச்சாட்டு கிளம்பி, அதை லுஹாவுக்கான சம்பளமாக போட்டு பீஜே நேர் செய்து, லுஹாவை காப்பாற்றிய கதையையும் மேற்கண்ட வீடியோவில் கண்டீர்கள். அஹ்மத் அல் அஹ்மத் தனக்கு சில மாதங்கள் சம்பளம் தராததால் பள்ளிவாசல் பணத்தில் கை வைத்தேன் என்று லுஹா சொல்வது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், அவரது சம்பளப் பாக்கி அளவுக்கு அல்லலவா எடுத்திருக்க வேண்டும்? மேலதிகமாக ஒன்றரை லட்சம் பள்ளிவாசல் பணத்தை எடுத்ததற்கு பெயர் என்னவோ? அதுவும் ரிபாயி போன்றவர்கள் இந்த பிரச்சினையைக் கிளப்பும்வரை இதற்கு தீர்வு காண லுஹா முயற்சிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் லுஹா அவர்களுக்கு ஊதியம் வழங்கிவந்த அஹ்மத் அல் அஹ்மத் எனும் அரபி, மஸ்ஜிதுர் ரஹ்மான் மட்டுமல்ல; தமிழகத்தில் அனைத்து பள்ளிகளையும் உன் மூலமாக நான் நிர்மாணிக்கிறேன். ஆனால் நீ, அஷ்ஷைக் கமாலுத்தீன் மதனியுடன் இருக்கவேண்டும் என்று சொன்னதாகவும், அதை தான் ஏற்கவில்லை என்றும் லுஹா சொல்கிறார். லுஹாவை கொண்டு தமிழகத்தில் நலப்பணிகள் செய்ய முன்வரும் அளவுக்கு அரபியுடன் இணக்கம் கட்டியுள்ள லுஹாவை சுப்ரீம்லீடராக கொண்ட பீஜே, வெளிநாட்டு நிதி பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டாமா? 

அயல்நாட்டு நிதியில் பீஜேயின் வேஷங்கள் இன்னும் வெளிப்படும் அருளாளன் நாடினால்.


வெள்ளி, 25 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 11]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

சலபுக் கொள்கை வழிகேடு என்று விமர்சித்து வரும் பீஜேயும் அவரது தரப்பினரும், அயல்நாட்டுப் பணம் என்றால் சலபுக் கொள்கை எங்களுக்கு ஒரு பிரச்சினையில்லை என்று சொல்லும் வகையில், ''நாங்களும் சலபுகள் தான்'' என்று வெளிநாட்டிற்கு அரபியில் கடிதம் அனுப்பிய அவலத்தை இந்த கடிதத்தில் காணுங்கள்;


சல்லி கிடைக்கும் போது, அதைப் பார்க்காமல் கொள்கை பேசிக்கொண்டிருக்க நாங்க என்ன வெவரம் தெரியாதவர்களா என்ன? --பீஜே&லுஹா.

அயல்நாட்டு நிதியில் அண்ணனின் வேஷங்கள் இன்னும் வெளிப்படும் அருளாளன் நாடினால்.

திங்கள், 14 மே, 2012

நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[2]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்ற கருத்து அனைவராலும் பேசப்பட்டாலும், உண்மை என்னவோ நேர்மாறாகத்தான் இருக்கிறது. ஒரு தவறை எளியவன் செய்தால் எளிதில் பாயும் சட்டம், அதே தவறை வலியவன் செய்தால் அவனுக்கு வாயிற்காவல் காக்கிறது. இதுபோக நாட்டின் அரசியலமைப்பு சட்டங்கள் அதிகார மையத்தில் வீற்றிருப்பவர்கள் சிலருக்கு கூடுதல் சலுகைகளை வழங்கியுள்ளது. ஒரு ராமசாமி மீது யார் வேண்டுமானாலும் வழக்குப் போடலாம். எப்போது வேண்டுமானலும் கைது செய்யப்படலாம். அதே ராமசாமி ஒரு மாநிலத்தின் முதல்வர் என்றால் அவர் ஊழலே செய்தாலும் அது பகிரங்கமாக தெரிந்தாலும் அவர் மீது யாரும் வழக்குப் போட்டுவிட முடியாது. கவர்னரின் அனுமதி தேவை. 

அதே போன்று ஒரு நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்து, அந்த உத்தரவுக்கு மாற்றமாக நமது நாட்டு அதிகார வர்க்கம் நடந்துகொண்டால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமா என்றால் பாயும்; ஆனால் பாயாது. உதாரணமாக பாபர் மஸ்ஜிதுக்கு எந்த பங்கமும் வராமல் பாதுக்காப்பேன் என்று உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த அன்றைய உ.பி. சங்பரிவார முதல்வர் கல்யாண்சிங், நீதிமன்றத்திற்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு பாபர் மஸ்ஜிதை தரைமட்டமாக்க எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்தார். நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய நீதிமன்றத்தை அவமதித்த இவருக்கு எத்தனை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது? ஒரு நாள். அதுவும் வீட்டுக்காவல். இதையே ஒரு சாமான்யன் செய்திருந்தால் அவன் ஜாமீனில் கூட வெளியே வரமுடியாத அளவுக்கு தண்டனை பெற்றிருப்பான் என்பதில் மாற்றுக்கருத்து உண்டா? ஏன் இந்த வேறுபாடு? காரணம் அதிகார மையம் என்பதால் தானே!

நமது நாடுதான் இப்படியிருக்கிறது என்றால் அண்டை நாடுகள் சிலவற்றில் கூட ஆண்டான்-அடிமை நீதி பரிபாலனம் நிலவுவதைப் பார்க்கிறோம். பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பைப் பார்ப்போம்.

தற்போதைய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, கடந்த 1990களில் ஏராளமான ஊழல் வழக்குகளில் சிக்கினார். அவற்றில், சுவிட்சர்லாந்தில் தொடரப்பட்ட சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கும் ஒன்றாகும். 
ஆனால், கடந்த 2007ம் ஆண்டு முஷரப் அதிபராக இருந்தபோது கொண்டு வந்த சட்டத்தால், ஆயிரக்கணக் கான ஊழல் வழக்குகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது. இதன்படி, சர்தாரி மீதான ஊழல் வழக்குகளும் கைவிடப்பட்டன. ஆனால், முஷரப் கொண்டு வந்த இச்சட்டம் செல்லாது என்று கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்துமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டது. 

ஆனால், அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்த பிரதமர் யூசுப் ராசா கிலானி முன்வரவில்லை. கோர்ட்டு கூறியபடி, சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை மீண்டும் நடத்தும்படி, சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதமும் எழுதவில்லை. இதனால், கிலானி மீது சுப்ரீம் கோர்ட்டு, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதை நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் விசாரித்தது.
இந்த வழக்கு விசாரணைக் காக, இரண்டு தடவை சுப்ரீம் கோர்ட்டில் கிலானி ஆஜரானார். அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி, அவர் தாக்கல் செய்த மனுவையும் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், இவ்வழக்கில் 26ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கிலானியும் ஆஜரானார்.
கோர்ட்டு அறையின் மத்தியில் உள்ள கூண்டுக்கு கிலானி சென்றார். சிறப்பு பெஞ்சின் தலைவர் நீதிபதி நசிருல் முல்க், தீர்ப்பை வாசித்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே மீறியதற்காக, பிரதமர் கிலானி மீதான கோர்ட்டு அவமதிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். எனவே, கோர்ட்டு கலையும்வரை அவர் நிற்க வேண்டும் என்று அடையாள தண்டனை விதித்தார். தண்டனை அறிவிப்புக்கு பிறகு அவர் 30 வினாடிகள் மட்டுமே நின்றதால், அதுதான் அவர் அனுபவித்த தண்டனை ஆகும். அதே நேரத்தில் கிலானி மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளதால் அவர் பதவிக்கு ஆபத்து என்றும் கூறப்படுகிறது.

இந்த தீர்ப்பை நாம் பார்க்கும் போது, பள்ளிக்கூடத்தில் சேட்டை செய்யும் மாணவனை, ''இந்த பீரியட் முடியும் வரை நீ பெஞ்சில் ஏறி நிற்கவேண்டும்' என்று ஆசிரியர் தண்டனை விதிப்பது போல் உள்ளது. பலகோடி ரூபாய்கள் ஊழல் செய்ததாக கூறப்படும் சர்தாரியின் மீதான வழக்கை புறந்தள்ளியதன் மூலம் நாட்டுமக்களுக்கு துரோகம் இழைத்துள்ள ஒருவருக்கு சில வினாடிகள் நிற்பது மட்டுமே தண்டனை என்ற தீர்ப்பு, கல்யான்சிங்கிற்கு நமது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நினைவு படுத்துகிறது.

அதே நேரத்தில், கிலானி ஒரு பிரதமராக இருந்ததும் நம்முடைய தமிழக முதல்வர் பாணியில் வழக்கு விசாரணைக்கு ஆண்டுக்கணக்கில் வாய்தா வாங்கவில்லை. நம்முடைய முதல்வர் பாணியில் கோர்டில் ஆஜராகாமல் இருக்க காரணம் சொல்லிக்கொண்டிருக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனால் நீதி விசயத்தில் நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த ஆண்டான் அடிமை பாரபட்சம் ஒழியவேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற நிலைவரவேண்டும். அதற்கு இஸ்லாம் ஒரு அழகான தீர்வைக் காட்டுகிறது. இறைத்தூதர் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்;

(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி [பாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். 'அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், 'அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?' என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்" என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), 'உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃ பாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்" என்று கூறினார்கள். 
நூல்; புகாரி.

இந்த சம்பவத்தில் என்னுடைய மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரது கரத்தை நான் துண்டிப்பேன் என்று முஹம்மத் நபி அவர்கள் சொல்லி, சட்டத்தில் பாரபட்சம் இருக்கக் கூடாது; யாருக்காகவும் சட்டம் வளையக்கூடாது. ஒரு தவறை செய்யும் சாமான்யனுக்கு கிடைக்கும் அதே தண்டனை எத்தகைய அதிகார மையத்தில் உள்ளவராக இருந்தாலும் கிடைக்கவேண்டும் என்ற நீதியின் இலக்கணத்தை செயல்படுத்திய பாங்கை நீதிமன்றங்கள் கையிலெடுத்தால், அநீதி அடியோடு மாண்டுவிடும் தானே!

-தீர்ப்புகள் வரும்...

ஞாயிறு, 13 மே, 2012

உலக அன்னையர்தினம்; அம்மா என்றால் அன்பு!

இன்று உலக அன்னையர்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னையர் தினத்தைப் பொறுத்தவரை நாம் இந்த தினத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்த நாளில் பெற்றோர்களின் சிறப்பை சொன்னால் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இங்கே பதிவு செய்கிறோம்.

அன்னையர் தினத்தை பொறுத்தவரையில், ஏனைய சர்வதேச தினங்களைப் போல் உலகம் முழுவதும் ஒரேநாளில் கொண்டாடப்படுவதில்லை.பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று உலகின் பெரும்பாலான நாடுகள் அன்னையர் தினத்தைக் கொண்டாடினாலும், சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்னரோ கொண்டாடுகின்றன.

உலக மாந்தர்களில் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புகளில் ஈடு இணையற்றது தாயின் அன்புதான். மனைவியானாலும், மக்களானாலும், உடன்பிறந்தோர் ஆனாலும் , உற்றார்-உறவினர்களானாலும் அந்த அன்புக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் தாயன்புக்கு எல்லையில்லை. ஒரு பெண் கற்பமாவது முதல் அவள் பிரசவிக்கும் வரை படும் வேதனைகளை, அவள் பெற்றெடுக்கும் குழந்தை 'அம்மா' என்று அழைத்தவுடன் அத்துணை வேதனையையும் அடியோடு மறந்துவிடுகிறாள்.தான் பெற்ற குழந்தையை பாலூட்டி, பாராட்டி, சீராட்டி வளர்த்து ஆன்றோர்களின் அவைதனில் தன்பிள்ளை சான்றோனாக மதிக்கப்பட தன்னையே மெழுகுவர்த்தியாக கரைத்துக்கொள்கிறாள். தான் வளர்த்த பிள்ளை தறுதலையானாலும் அந்த தாய் ஒதுக்கிவிடுவதில்லை. தான் வளர்த்த பிள்ளை தன்னை அநாதை விடுதியில் சேர்த்தாலும், அனாதையாக தெருவிலே விட்டுவிட்டாலும் அந்தத்தாய் தன் பிள்ளையை சபிப்பதில்லை. அதனால் தான் உலகில் இழந்த எந்த உறவையும் மீட்டெடுக்கமுடியும் தாயைத்தவிர! மனைவி வெறுத்துவிட்டால் மற்றொரு மனைவியை திருமணம் செய்து ஈடு செய்துவிடலாம். ஒரு பிள்ளை வெறுத்து விட்டால் இன்னொரு பிள்ளையை கொண்டு ஈடு செய்து விடலாம். உடன்பிறந்தோர் வெறுத்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் அண்ணன் -தம்பி என்று அழைத்து ஆனந்தப்பட்டு கொள்ளலாம். ஆனால் ஒரு தாயின் அன்பை நாம் இழந்துவிட்டால் அந்த அன்பை எந்த அன்னியப்பெண்ணாலோ , அல்லது அன்னையின் உடன்பிறந்தவர்களாலோ கூட தரமுடியாது. இத்தகைய மகத்தான தகுதி தாய்க்கு உள்ளதால்தான் இஸ்லாம்,உலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் தலைவர் ரசூல்[ஸல்] அவர்களுக்கு அடுத்தபடியாக தாயை நேசிக்கவேண்டும் என்று கட்டளையிடுகிறது.

முதல் மூன்று இடம் தாய்க்கே!
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள்.[நூல் புஹாரி 5971 ]


இத்தகைய உயர்வான முதல் மூன்று ஸ்தானத்தை தாய்க்கு இஸ்லாம் வழங்கியிருக்க, திருமணமாகும்வரை தாய்சொல்லை தட்டாத மகன் திருமணத்திற்கு பின் மனைவி சொல்லே மந்திரம் என்று மகுடிக்கு மயங்கும் பாம்பாக மாறி, தாயை-தந்தையை பழிப்பதும், விரட்டுவதும் அவர்களை நோவினை படுத்துவதுமான செயல்களை செய்பவர்களை பார்க்கிறோம்

அல்லாஹ் கூறுகின்றான்;
மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."[31:14]

மனிதனுக்கு தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்; "இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்" என்று கூறுவான்.[46:15 ]

பெற்றோரை ஏசலாகாது;
(வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக![17:23 ]

பெற்றோரை சபிப்பது பெரும்பாவம்;
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் 'ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)' என்றார்கள்.[நூல்;புஹாரி 5973 ]

இறைவனுக்கு பிடித்தமான நற்செயல்;
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?' என்று கேட்டேன். அவர்கள், 'தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது" என்று கூறினார்கள். 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன் அவர்கள், 'பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுவதாகும்" என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மெளனமாம் விட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.
[நூல்;புஹாரி எண் 2782 ]

அறப்போரை காட்டிலும் அன்னைக்கு செய்யும் பணிவிடை சிறந்தது;
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (இருக்கிறார்கள்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு' என்றார்கள்.
[நூல்;புஹாரி எண் 5972 ]

ஈன்றவர்கள் இணைவைப்பில் இருந்தாலும் இணக்கமாக இரு;
பெற்றோர்கள் அறியாமையினால் இணைவைப்பில் இருப்பதால் சில தவ்ஹீத்வாதிகள் பெற்றோரை புறந்தள்ளி அவர்களை கவனிக்காமல் விட்டுவிடுவதை பார்க்கிறோம். அதற்கு அவர்கள் கூறும் காரணம் பெற்றோர் இணைவைப்பிலிருக்கும்போது அவர்களுடன் நாங்கள் எப்படி இணக்கமாக இருக்கமுடியும் என்று கேட்கின்றனர். பெற்றோரின் கொள்கையில்தான் நாம் உடன்படக்கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்வது நம்மீது கடமையாகும்.

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார். என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்" என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி எண் 2620

பெற்றோருக்கு பணிவிடை செய்து பெரியோனிடம் பிரார்த்தித்தால் பிரார்த்தனை ஏற்கப்படும்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது. அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நம்மை (நம்முடைய) வாய்மையான செயல் தான் காப்பாற்ற முடியும். எனவே, நம்மில் ஒவ்வொருவரும், தான் வாய்மையுடன் நடந்ததாக நம்புகிற விஷயத்தைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.எனவே, அவர்களில் ஒருவர் பின் வருமாறு பிரார்த்தித்தார்:"இறைவா! எனக்கு வயது முதிர்ந்த தாய் தந்தையர் இருந்தனர். நான் ஒவ்வோர் இரவிலும் அவர்களுக்கு என் ஆடு ஒன்றின் பாலைக் கொண்டு செல்வேன். ஓர் இரவு அவர்களிடம் செல்லத் தாமதமாம்விட்டது. அவர்கள் தூங்கிவிட்ட பின்பு சென்றேன். என் மனைவியும் என் குழந்தைகளும் பசியால் கூக்குரலெழுப்பி அரற்றிக் கொண்டிருந்தனர். என் தாய்தந்தையர் பருகுகிற வரை அவர்களுக்குப் புகட்ட மனமில்லாதவனாக நான் இருந்தேன். அதே வேளையில், அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிடவும் நான் விரும்பவில்லை. நான் அவர்களை (பால் தராமல்)விட்டுவிட, அவர்கள் அதைக் குடிப்பதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பதை நான் விரும்பவுமில்லை. எனவே, அதிகாலை நேரம் உதயமாகும் வரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். (இதை நீ அறிவாய்.) இதை நான் உன் அச்சத்தின் காரணத்தால் தான் செய்தேன் என்று நீ கருதினால் எங்களைவிட்டு (இந்த அடைப்பை இன்னும் சற்று) நீக்குவாயாக!" அவ்வாறே, அந்தப் பாறை அவர்கள் வானத்தைப் பார்க்கும் அளவிற்கு (இன்னும் சற்று) விலகியது.[ஹதீஸ் சுருக்கம் புஹாரி;எண் 3465 ]

பெற்றோருக்காக மன்னிப்பு தேடுங்கள்;

رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا
"என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே" (என்றும் கூறினார்).[71:28 ]

பெற்றோரிடம் நமக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டுதல்;

قَالُواْ يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ
(அதற்கு அவர்கள்) "எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.[12:97 ]


அன்பானவர்களே! அன்னையின் காலடியில்சொர்க்கம் இருக்கிறது என்ற நபிமொழிக்கேற்ப, பெற்றோருக்கு பணிவிடை செய்வோம். சொர்க்கத்தை அடைவோம்.

சனி, 12 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 10]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

தமிழகத்தில் ஜாக், வெளிநாட்டில் நிதி உதவி பெற்று பள்ளிவாசல்கள் எழுப்பி வருகின்றது. அதே போல் இலங்கையில் சில நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெற்று, பள்ளிவாசல்கள், மற்றும் நலப்பணிகளை செய்துவருகிறார்கள். இத்தகையோரை பீஜே, அரபுநாட்டு சல்லிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிக்கிறார். உண்மையில் இவ்வாறு விமர்சிக்கும் அருகதை பீஜே அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

தமிழகத்தில் சேலம் நகரில் தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்காக பீஜே, இலங்கையைச் சேர்ந்த ஒரு தனவந்தரிடம் இந்திய மதிப்பில் ஒரு லட்சம் பெற்று அதை அந்த பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு வழங்கினார். இந்த தொகையை வழங்கிய அந்த இலங்கை தனவந்தருக்கு பீஜே நன்றி தெரிவித்து கடிதமும் எழுதினார். இதை பீஜே அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்கத் தயாரா? 

வெளிநாடுகளில் நிதியை வாங்கி, பையில் பணத்தைப் போட்டுக்கொண்டு 'பள்ளிவாசல் வேண்டுமா? என்று ஜாக்கினர் அலைவதாகவும், அதில் அவர்களுக்கு 'பாயிதா'[வருமானம்] கிடைப்பதாகவும், ஜாக்கை விமர்சிக்கும் பீஜே, தனது கொள்கைக்கு மாற்றமாக, இலங்கை தனவந்தரிடம் பள்ளிவாசல் கட்ட பணம் வாங்கியது முரணில்லையா? இல்லையென்றால், அரபுநாட்டு சல்லி அடிக்க மாட்டோம். ஆனால் அண்டை நாட்டு சல்லி அடிப்போம் என்பதுதான் கொள்கையா? தமிழத்தில் இவர் அமைப்பின் சார்பாக எழுப்பப்படுள்ள மர்கஸ்கள், இவரது ஜமாஅத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளிவாசல்கள், முழுக்க முழுக்க பிழைக்கப் போனவர்களிடம் மட்டுமே வசூலித்து கட்டப்பட்டது என்று காட்டும் வகையில் ஒரு வெள்ளையறிக்கை வெளிடுவாரா பீஜே?

சரி., இலங்கையில் மட்டும் தான் இவர் பணம் வாங்கினாரா என்றால் அரபு நாட்டிலும் வாங்கினார். எந்த வெளிநாட்டிடமிருந்தும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் உதவி பெறமாட்டோம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் பீஜே, துபையை சேர்ந்த ஒரு சகோதரர் [பெயர் தேவைப்பட்டால் வெளியிடுவோம்] முயற்சியின் பெயரில் ஒரு அரபியிடமிருந்து இப்தார் செலவுக்காக கடந்த 2005 அல்லது 2006 ஆம் ஆண்டு ஒன்றரை லட்ச ரூபாய்கள் ஜமாஅத் பெறவில்லையா? இதை பீஜே அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்கத் தயாரா? 

இதில் இன்னொரு துரோகமும் உள்ளது. அதாவது ஒரு நாள் இப்தார் செலவு 5000 வீதம் ஒரு மாத இப்தார் செலவுக்கான 1 ,50 ,000 ரூபாய்களை அந்த அரபி வழங்கிய பின்னும், அதை மறைத்து நோன்புக் கஞ்சி இன்னும் முழுமையடையவில்லை. எனவே காசு குடுங்கம்மா என்று பாக்கர் மூலமாக ஒவ்வொரு ரமலான் சிறப்பு பயானுக்குப் பின்னும் அறிவிப்புச் செய்ய வைத்தார் பீஜே. இதுபற்றி ஒரு பிரச்சினையில் பீஜே பேசும்போது, ''இப்ப வசூலாகுற காசை வச்சுத்தான் நான் ஒரு வருஷம் ஜமாஅத்தை ஓட்டனும்'ன்னு சொன்னாரே! மறுக்கமுடியுமா? இப்தார் நோக்கத்திற்காக அரபி தந்த தொகையை இப்தாருக்கு செலவு செய்து விட்டு, உள்ளூரில் இப்தார் என்ற பெயரில் வசூலித்த பணத்தைக் கொண்டு ஜமாஅத் நடத்தினார் என்றால், ''நாங்கள் எந்த வகைக்கு என்று வசூலித்தோமா அந்த வகைக்கு மட்டுமே செலவு செய்வோம்'' என்று சொல்லிக் கொள்வது பொய்யில்லையா? நோன்புக்கஞ்சிக்காக தந்த பணத்தை ஜமாஅத் செலவிற்கு பயன்படுத்துவது துரோகமில்லையா?

அடுத்து, இன்னொரு அரபுநாட்டு அரபியிடம் பணம் பெற்ற பீஜே, அந்த பணத்தில் ஒரு தொகையை தர்மபுரியில் உள்ள ததஜ பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் போர் [ஆழ்துளைக் கிணறு] அமைக்க பணம் தந்தார். அவ்வாறு போர் அமைத்து அந்த தர்மபுரி நிர்வாகிகள் போட்டோ எடுத்து அனுப்பினார்கள். அந்த போட்டோ சரியில்லை என்று அரபியிடம் பணம் வாங்கித்தந்த வளைகுடா நிர்வாகிகள் சொன்னதையடுத்து, அன்றைய துணைப்பொதுச்செயலர் இக்பால் அவர்களை நேரடியாக தர்மபுரிக்கு அனுப்பி, ''பிர் அஹ்மத்' என்ற என்ற பதாகை வைக்கப்பட்டு, அந்த நீர்நிலை படம்பிடிக்கப்பட்டு, பணம் தந்த அரபிக்கு அனுப்பினார் பீஜே. இதை மறுக்க முடியுமா? அடுத்த இயக்கம் அரபியிடம் முறையாக பணம் பெற்று நலப்பணிகள் செய்தால், அவனை சல்லிக்கு மாரடிப்பவன் என்று விமரிக்கும் பீஜே, இந்த அரபியை தொண்டியிலிருந்து பிழைக்கப் போனவன் என்று சொல்லப்போகிறாரா? 

இதுபோன்று அரபிகளுடன் த த ஜமாத்திற்கு உள்ள தொடர்பு பற்றிய விபரங்கள் ஒரு பட்டியலே உண்டு. விரிவஞ்சி தவிர்க்கிறோம்.

அடுத்து வருவது;
வழிகெட்ட கொள்கை என்று பீஜெயால் வர்ணிக்கப்படும் சலபிக் கொள்கை, அரபு நாட்டு சல்லிக்காக புனிதமான கொள்கையாக பரிணாமம் பெற்ற அதிசயம்.
அருளாளன் நாடினால் அதிவிரைவில்.

வெள்ளி, 11 மே, 2012

மார்க்கத்தை இழிவுபடுத்தி, மானங்கெட்ட சலுகை நமக்குத் தேவையா?- சீறுகிறார் சம்சுதீன் காசிமி.


தவ்ஹீத் இயக்கங்களே தடம்புரண்டு தரங்கெட்ட சலுகைகளுக்காக சாதியை ஆதரிக்கும் நிலையில், மவ்லவி சம்சுதீன் காசிமி அவர்களின் துணிச்சலான உரைக்கு எமது பாராட்டுக்கள்.

நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[1]

விளைநிலத்தின் வரப்புச் சண்டைக்காக கோர்ட்டு படியேறிய பங்காளிகள் இருவர், வயலையே விற்று கோர்ட்டுக்கு செலவு செய்த பின்னும் கூட தீர்ப்பு வந்தால் ஆச்சர்யமே என்று சொல்லும் அளவுக்கு நீதிமன்றங்களில் லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதை மனதில் கொண்டு பின் வரும் சம்பவத்தை பார்ப்போம்.

கேரளா, கொல்லம் நீண்டகரா துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 15ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, அந்த வழியாகச் சென்ற, "என்ரிகா லக்சி' என்ற இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில், இரு மீனவர்கள் பலியாகினர். கடற்கொள்ளையர்கள் என, தவறாக நினைத்து, மீனவர்களை சுட்டு விட்டனர். இந்த சம்பவத்தில், படகிலிருந்த 11 மீனவர்களில், தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஜலஸ்டின், 45, மற்றும் அஜீஷ் பிங்கி, 25 ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் லத்தோர் மற்றும் ஜரோன் ஆகியோர் பிப்ரவரி 17ம் தேதி கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க, இத்தாலி வெளியுறவு இணை அமைச்சர் மற்றும் ராணுவ அமைச்சர், இந்திய நிர்வாகத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பயன் தரவில்லை. மேலும், இவ்வழக்கு இந்திய தண்டனை சட்டப்படி, கேரளாவில் நடைபெறும் என்றும், தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா மற்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த மீனவர்கள் இருவருடைய குடும்பத்துக்கும் கேரளா மாநில அரசு ரூ.5 லட்சம் கருணைத்தொகை வழங்கி இருப்பது மட்டுமல்லாமல், கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெலஸ்டின் மனைவி ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டும், பிங்கியின் சகோதரி ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டும் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் அனுமதித்ததுடன், கப்பல் நிறுவனம் ரூ.3 கோடியை வைப்புநிதியாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்களை சந்திக்க, அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினர், திருவனந்தபுரம் வந்தனர். அவர்கள், பலியான மீனவர்கள் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, இத்தாலிய பாதுகாவலர்களின் குடும்பத்தினர், இத்தாலிய நிர்வாகத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில் பலியான தமிழக மீனவர்கள் இருவர் குடும்பத்திற்கு, தலா ஒரு கோடி ரூபாய் தர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில், இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் குடும்பத்தினரும், பலியான மீனவர்கள் குடும்பத்தினரும் கையெழுத்திட்டுள்ளனர். 

இதையடுத்து, இத்தாலிய பாதுகாவலர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என, ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டிருந்த, துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்களின் குடும்பத்தினர், "இத்தாலியர்கள் இருவருக்கும் எதிராக எந்த வழக்கையும் நடத்தப் போவதில்லை என்றும், அவர்கள் இருவரையும் மன்னித்து விட்டோம்' என்றும் தெரிவித்தனர். 

இதற்கிடையில், இத்தாலிய பாதுகாவலர்களுக்கு எதிரான, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி, இத்தாலிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக, மீனவர்களின் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஆவணங்களை வாபஸ் பெற, கேரள ஐகோர்ட் அனுமதி அளித்தது. தங்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர, இத்தாலிய நிர்வாகத்தினர் சம்மதித்து விட்டதால், தாங்கள் வழக்குகளைத் தொடர விரும்பவில்லை என, மீனவர்கள் குடும்பத்தினர் தெரிவித்ததை அடுத்து, நீதிபதி கோபிநாதன் அனுமதி வழங்கினார். இதையடுத்து இத்தாலியர்கள் இருவரும் விரைவில் விடுதலையாகலாம் என எதிர்பார்த்த நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு இவ்வழக்கில் ஒரு வேகத்தடையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை சம்மந்தப்பட்ட கொலையுண்டவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் பெற அனுமதித்த கேரள நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருப்பதுடன், இது சட்டத்துக்கு விரோதமானது, இது செல்லாது என்று தெரிவித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

இந்தப்பிரச்சினையில் கேரளா உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை சட்டத்திற்கு முரணானதா என்பதை பார்ப்பதை விட, நியாயப்படி சரியானதா என்று பார்த்தால் சரிதான். ஏனென்றால் சம்மந்தப்பட்ட கொலையுண்டவர்களின் குடும்பத்தினர், கொலையாளிகளிடம் இழப்பீடு வாங்கிக்கொண்டு ஒதுங்கிக் கொண்ட நிலையில், அந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக கூறிய நிலையில், அந்த வழக்கை நடத்தியே தீருவோம் என்று கேரளா நீதிமன்றம் எப்படி சொல்ல முடியும்? யாருடைய புகாரின் பேரில், யாருடைய நலனுக்காக இந்த வழக்கு பதியப்பட்டதோ, அவர்களே நஷ்டஈடு பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை மன்னித்து விட்ட பின்னால், நீதிமன்றங்களுக்கு என்ன வேலை இருக்கிறது? கேரளா நீதிமன்றத்தின் நடவடிக்கை இஸ்லாமிய சட்டத்திற்கு ஏற்ப உள்ளது. இறைவன் கூறுகின்றான்; 

ஈமான் கொண்டோரே! கொ லைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். இருப்பினும் [கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

[2 ;178 ]

இந்த இறை வசனத்தில் கொலைக்கு கொலைதான் தீர்வு என்று சட்டம் சொல்லும் இறைவன், கொலை செய்தவனை, கொலையுண்டவரின் வாரிசுகள் மன்னித்து விட்டால், அந்த வாரிசுகளுக்கு உரிய இழப்பீட்டை கொலை செய்தவன் நியாயமான முறையில் வழங்கவேண்டும் என்று கட்டளையிடுகின்றான். ஒரு கொலையாளியை தண்டிப்பதற்கும், மன்னிப்பதற்கும் கொலையுண்டவரின் குடும்பத்திற்கே இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது. அந்த வகையில் இத்தாலி கொலையாளிகளை கொலையுண்டவரின் குடும்பமே மன்னித்து விட்டதால் அதை கேரளா உயர்நீதிமன்றமும் அங்கீகரித்து பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இதில் என்ன தவறு இருக்க முடியும்? ஒரு கொலைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணக் கூடாது என்பது ஒரு அறிவுப்பூர்வமான வாதமல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்த வழக்கில் கொலையுண்டவரின் வார்சுகள் நீதிமன்றத்தை அணுகியே  இதற்கு தீர்வு கண்டுள்ளனர். எனவே நீதிமன்றத்திற்கு வெளியே என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. மேலும், ஒரு பொருளுக்கு இழப்பீடு வாங்கிகொண்டு ஒதுங்கிக் கொள்ள அனுமதிக்கும் சட்டம், ஒரு விபத்திற்கு இழப்பீடு வாங்கிகொண்டு ஒதுங்கிக் கொள்ள அனுமதிக்கும் சட்டம், ஒரு உயிர் விசயத்தில் இழப்பீடு வாங்கிக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறுவது புதிராக உள்ளது. மேலும், இந்த விசயத்தில் தம்மைப் போலவே சட்டம் படித்த கேரளா நீதிபதிகளை கண்டிக்கும் உச்சநீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கொலையாளிகள் விசயத்தில் என்ன செய்திருக்கிறது?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றமே விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெறக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு, "சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றமே விசாரணைக்கு எடுத்து கொள்கிறது. ஜூலை 10-ம் தேதி முதல் விசாரணை நடைபெறும்" என்று கூறியுள்ளது.

இந்த மூவர் சம்மந்தப்பட்ட இந்த வழக்கு ஏற்கனவே தமிழகத்தின் கீழ்கோர்ட்டு தண்டனை விதித்து, அதை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தி, பின்பு உச்சநீதிமன்றத்தில் இந்த தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு, தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு, பின்பு ஜனாதிபதியாலும் நிராகரிக்கப்பட்டு, தூக்குத்தண்டனைக்கு நாள் குறித்த பின்னால், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு; அதான் தொடர்ச்சியாக இப்போது மறுபடியும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றால், ஒரே வழக்கில் எத்தனை முறை சுழற்ச்சி விசாரணை; எத்தனை முறை தீர்ப்பு? ஒரு பிரதமர் கொலை வழக்கில் 20 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட முடியாத நிலை உள்ள நாட்டில், கொலைக்கு நஷ்டஈடு பெற்றுக்கொண்டு விரைவான தீர்வு காண மக்கள் முயற்ச்சிப்பதில் என்ன குறை காண முடியும்? 

ராஜிவ்காந்தி கொலையாளிகள் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து விட்டதால் அவர்களுக்கு இதுவே ஒரு தண்டனை; இனியொரு தண்டனை விதிக்க முடியாது என்று சொன்னால், இந்த தாமதத்திற்கு யார் காரணம்? ஜனாதிபதியல்லவா? கொலையுண்டவர்களுக்கு சம்மந்தமே இல்லாத ஜனாதிபதிக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கிய அரசியல் சாசனம் அல்லவா? இப்படி ஜவ்வாக ஒரு வழக்கு இழுபடுவதைத் தான் உச்சநீதிமன்றம் விரும்புகிறதா? அல்லது இஸ்லாம் சொல்லும் வழிமுறையை பின்பற்றி கொலையுண்டவன் குடும்பத்தாரிடம் கருத்துக் கேட்டால் ஒரு நாளில் வழக்கு முடிவுக்கு வந்து விடுமே! மேலும், இருபது ஆண்டுகள் கண்ணித்தீவாக நீளும் இந்த கொலைவழக்கில் வெறுமனே ராஜீவ் மட்டும் தான் கொல்லப்பட்டாரா? ராஜீவோடு சேர்த்து பதினைந்து பேர் கொல்லப்பட்டார்களே! அவர் தம் குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்று என்றாவது நீதிமன்றங்கள் கவலைப்பட்டதுண்டா? ஆண்டுக்கணக்கில் நீளும் இந்த வழக்கால் கொலையுண்டவரின் குடும்பத்திற்கு நயாப்பைசா பிரயோஜனம் உண்டா? இல்லை. அதே நேரத்தில் இந்த கைதிகளை பாதுகாக்க, இவர்களின் வழக்கை நடத்த என்று பலகோடிகள் மக்களின் வரிப்பணம் பாழானது தான் மிச்சம். இதையெலாம் உணர்ந்துதானோ என்னவோ, அந்த இரு மீனவ குடும்பத்தினர் உடனடி நிவாரணத்திற்கு வழிகண்டு விட்டனரோ!

எனவே, கொலையுண்டவனுக்கு சம்மந்தமே இல்லாத ஜனாதிபதிக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கும் சட்டம், கொலையுண்டவனின் குடும்பம் மன்னித்தால் அதை எதிர்ப்பது எந்தவகையிலும் நியாயமில்லை தானே! எனவே குற்றவாளியை தண்டிக்கும் அல்லது மன்னிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதை மறு பரிசீலனை செய்து, பாதிக்கப்பட்டவனின் வாரிசுகளுக்கு வழங்கினால் வழக்குகள் தேங்குமா? வரிப்பணங்கள் பாழாகுமா? சிந்திப்போம்- சீர்திருத்தம் செய்வோம். சட்டங்கள் நீதியை நிலைநாட்டவே என்பதை உணர்வோம்.

தீர்ப்புகள் வரும்....



ஞாயிறு, 6 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 9]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

2002 ஆண்டு இலங்கையை சேர்ந்த ஒரு தனவந்தர், பீஜெயாகிய தனக்கு நியாஸ் ஹாஜியார் என்பவர் மூலமாக ஐந்து லட்சம் தர முன் வந்ததாகவும், அந்த தனவந்தரை எனக்குத் தெரியாது. எனவே நான் மறுத்து விட்டதாக சொல்லி விடுங்கள் என்று நியாஸ் ஹாஜியாரிடம் சொன்னதாகவும், ''ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும்' என்ற தொடரில் பீஜே கூறியுள்ளார். 

இதில் கவனிக்க வேண்டியது, ஐந்து லட்சத்தை தான் ஏற்க மறுப்பதற்கு காரணம் வெளிநாட்டு நிதி பெறக்கூடாது என்ற எனது கொள்கைதான் என்று பீஜே சொல்லவில்லை. தனக்கு ஐந்து லட்சம் தர முன் வந்த அந்த தனவந்தர் யாரென்று எனக்குத் தெரியாது. எனவே எனக்கு வேண்டாம் என்றுதான் பீஜே காரணம் சொல்கிறார். அப்படியானால் அந்த தனவந்தர் தெரிந்தவராக இருந்திருந்தால் வாங்கியிருப்பார்தானே? 

சரி. வெளிநாட்டு நிதி கூடாது என்ற கொள்கை இவர் ஜாக்கில் இருந்து கழன்ற காலத்திலேயே, அதாவது தவ்ஹீத் பிரச்சாரக்குழு உருவான காலத்திலேயே இவர் உருவாக்கிக் கொண்டதாகும். அப்படியானால் தான் மட்டும் வெளிநாட்டு நிதி வாங்காமல் இருந்தால் மட்டும் போதாது. வேறு யாருக்கும் வாங்கிக் கொடுக்கவோ, பரிந்துரை செய்யவோ கூடாது. அப்போதுதான் இவர் அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறார் என்று அர்த்தம். இந்த அடிப்படையில் இலங்கையிலிருந்து வந்த அந்த ஐந்து லட்சத்தை இவர் திருப்பி அனுப்பியிருந்தால், உண்மையில் இவர் கொண்ட கொள்கையில் உறுதியானவர் என்று அர்த்தம். ஆனால் இவரோ கடையநல்லூரில் இயங்கும் ததஜ  சார்பு நிறுவனமான இஸ்லாமிய கல்லூரிக்கு கொடுக்குமாறு பரிந்துரை செய்கிறார். இதிலிருந்து இவரது வெளிநாட்டு நிதிக் கொள்கையின் லட்சணம் தெரியவில்லையா? 

இப்போது பீஜே சொல்லலாம். இஸ்லாமியக் கல்லூரி என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவைப் பெற்றது தானே தவிர, தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமானதல்ல என்று. ஏற்கனவே காயல்பட்டினம் இஸ்லாமியக் கல்விச் சங்கம் விசயத்தில் இப்படி இவர் சொன்னவர்தான். பின்பு நாம், இஸ்லாமிய கல்விச் சங்கம் ஹாமித்பக்ரிக்கு மட்டும் சொந்தமானதல்ல. இவரது இன்றைய ஜமாஅத் நிர்வாகிகள் பலர் அந்த சங்கத்தின் அங்கம் என்று பட்டியலிட்டோம். அதை பீஜெயால் மறுக்கமுடியவில்லை. அதே போல் இந்த இஸ்லாமியக் கல்லூரி வெறுமனே ஜமாஅத் ஆதரவு பெற்ற நிறுவனம் மட்டுமல்ல. முழுக்க முழுக்க ஜமாஅத்தின் தூண்கள் அங்கம் வகிக்கும் நிறுவனமாகும்.

இஸ்லாமியக் கல்லூரி சம்மந்தமான விபரங்கள்;

இக்கல்லூரிக்காக உருவாக்கப்பட்ட டிரஸ்டின் பெயர்; இஸ்லாமிய அறக்கட்டளை.

இந்த டிரஸ்டின் அங்கத்தவர்கள்;
  1. எஸ்.எஸ்.யூ. சைபுல்லாஹ் ஹாஜா.
  2. ஹாமித்பக்ரி.
  3. அப்துல் ஜலீல் மதனீ.
  4. சம்ஷுல்லுஹா.
  5. முஹம்மது அலி ரஹ்மானி.
  6. ஜே.எஸ்.ரிபாயி.
  7. டி.எம்.ஜபருல்லாஹ்.
  8. அப்துரரஹ்மான் பிர்தவ்சி.
  9. எம்.ஐ.ஸுலைமான்.
  10. எம்.எஸ்.ஸுலைமான்.
  11. அலிஅக்பர் உமரி.
இந்த டிரஸ்டிகளில் இன்றும் பீஜெயோடு ஒட்டிக்கொண்டிருக்கும் பலர் இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இதில் தமுமுக பிரிவின் பின்னால் ரிபாயி போன்ற சிலர் விலகிய பிறகு, பீஜேயின் நம்பிக்கைக்கு பாத்திரமான கலீல்ரசூல், அன்வர்பாஷா உள்ளிட்டோர் டிரஸ்டிகளாக சேர்க்கப்படுகிறார்கள். இந்த கல்லூரியில் அன்றும், தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகிகள் தான் படம் நடத்தினர்கள். நிர்வாகம் செய்தார்கள். இன்றும் இந்த கல்லூரி ததஜ மேலான்மைக்குழுத் தலைவர் சம்சுல்லுஹா தலைமையில், ஜமாத்தின் கல்லூரி போலவே செயல்படுகிறது. மேலும், இந்த இஸ்லாமிய அறக்கட்டளை டிரஸ்டை ஜமாஅத்தில் சேர்க்கவேண்டும் என்ற கருத்து எழுந்தபோது, அதை சைபுல்லாஹ் நீங்கலாக , அனைவரும் எதிர்த்தார்கள். குறிப்பாக கலீல்ரசூல் கடுமையாக எதிர்த்தார். அதன் பின்னால் பீஜே தலைமையில் நடந்த பிறிதொரு அமர்வில், ஜமாஅத்தின் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இக்கல்லூரி ஜமாஅத்தின் அதரவு பெற்ற கல்லூரியாக அவதாரம் எடுத்தது.
  1. இக்கல்லூரியின் பாடத்திட்டம் ஜமாஅத் தான் தீர்மானிக்கும்.
  2. இக்கல்லூரியில் மாணவர் சேர்க்க; நீக்கம் ஜமாஅத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
  3. கணக்கு வழக்குகளில் ஜமாஅத் தலையிடும்.
உள்ளிட்டவைகள் முக்கிய நிபந்தனைகளாகும். மேலும் இந்த இஸ்லாமிய அறக்கட்டளைக்கு சொந்தமான பல லட்சங்கள் மதிப்புள்ள ஒரு சொத்து இன்றைக்கு ததஜ கைவசம் உள்ளது. இதையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம், அது தனி நிர்வகம்மா; அதுக்கும் ஜமாத்துக்கும் சம்மந்தமில்லம்மா; என்று பீஜே ஜகா வாங்குவார் என்பதற்காகத் தான்.

இப்போது சொல்லுங்கள். பீஜே வெளிநாட்டு நிதியில் யோக்கியராக இருந்தால், அந்த நிதியை திருப்பி அனுப்பாமல், ஜமாஅத்தின் மேற்பார்வையில் இயங்கும் ஒரு கல்லூரிக்கு வாங்கிக் கொடுத்தது ஏன்? பேங்கில் நாம் போடும் பணத்திற்கு வரும் வட்டியை வாங்கி, வேறு நற்காரியத்திற்கு பயன்படுத்தினால் கூட ஹராம் என்று பத்வா வழங்கும் பீஜே, தான் கொண்ட கொள்கைக்கு மாற்றமாக அதே வெளிநாட்டு நிதியை தனது ஜமாஅத் மேற்பார்வையில் இயங்கும் ஒரு நிறுவனத்திற்கு வாங்கித் தந்தது முரண்பாடில்லையா? [குறிப்பு; வட்டியை இங்கே உதாரணத்திற்குத்தான் காட்டியுள்ளோம். அதை நாம் சரிகானவில்லை. எனவே அதை வைத்து ஹலால்- ஹராம் என பீஜே திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம்]

மேலும், காயல்பட்டினம் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பணிகளுக்காக ஹாமித்பக்ரி, சைபுல்லாஹ் ஹாஜா ஆகியோர் வெளிநாட்டு நிதி பெற முயற்ச்சித்தார்கள். அது தனி நிறுவனமாக இருந்தாலும், இவ்விருவரும் ஜமாஅத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பதால், ஜமாஅத் தான் வசூலிக்கிறது என்ற தோற்றம் வரும் என்று நான் தடுத்து விட்டேன் என்று கூறும் பீஜே, அதே முக்கிய நிர்வாகிகளான ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும், லுஹாவும், இரண்டு சுலைமாங்களும், பிர்தவ்சியும், கலீல் ரசூலும், அன்வர்பாஷாவும் அங்கம் வகிக்கும் இந்த இஸ்லாமிய அறக்கட்டளைக்கு தானே முன் வந்து வெளிநாட்டு நிதியை பெற்றுத் தருகிறார் என்றால், இப்போது ஜமாஅத்தின் கொள்கை பாதிக்கப்படாதா? ஜமாஅத் பெயரில் வாங்கினால் தவறு. ஜமாஅத் நிர்வாகிகள் தனியாக கூடி ஒரு டிரஸ்டை உருவாக்கி அதற்காக வாங்கினால் தவறில்லையோ? மேலும், இஸ்லாமிய அறக்கட்டளை வெளிநாட்டு நிதி பெறலாம் என்றால், இஸ்லாமிய கல்விச் சங்கம் வெளிநாட்டு நிதி பெற முயற்ச்சித்ததை தடுத்தது பீஜேயின் மாற்றாந்தாய் மனப்பான்மையில்லையா? 

இதையொட்டி நாம் கேட்பது;
  1. வெளிநாட்டு நிதி ஜமாஅத் பெயரால் பெறக்கூடாது என்றால், ஜமாஅத் நிர்வாகிகள் தனிக்கடை போட்டு வசூலிக்கலாமா? அதற்கு பீஜே துணை நின்றது அவரது கொள்கைக்கு முரணில்லையா? பீஜேயின் இந்த வழிகாட்டுதல் அடிப்படையில், அவரது ஜமாஅத் நிர்வாகிகள், வெளிநாடுகளில் ஜமாஅத்திற்காக இல்லாமல் துணை நிறுவனங்களை ஏற்படுத்தி வசூலித்துக் கொள்ளலாமா?
  2. ஜமாஅத் சம்பளம் கொடுக்க கூட முடியாமல் திணறியபோது, ஹாமித்பக்ரி இஸ்லாமிய கல்விச் சங்கத்திற்காக வசூல் வேட்டையாடினார் என்று குமுறிய பீஜே, அதே காலகட்டத்தில் ஒரு பெருந்தொகையை இஸ்லாமிய அறக்கட்டளைக்கு பெற்றுத்தந்தது முரண்பாடில்லையா? 
  3. வெளிநாடுகளில் நாமாகப் போய் வசூலிக்கக் கூடாது. வெளிநாட்டினர் தாமாக தந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்றால், இதுவரை எத்தனை கோடிகள் வெளிநாட்டவரிடம் இருந்து ஜமாத்திற்காக வாங்கப்பட்டது என்று பீஜே சொல்லுவாரா?
  4. இஸ்லாமிய அறக்கட்டளைக்கும், அதன் பெயரால் இயங்கும் இஸ்லாமியக் கல்லூரிக்கும், அதன் சொத்துக்களுக்கும் ஜமாத்திற்கோ, தனக்கோ சம்மந்தமில்லை என்று கூறுவரா? அதன் சொத்து ஆவணங்களை ஜமாஅத் வாங்கி வைத்திருப்பது எதற்காக என்று கூறுவாரா?
  5. ஜமாத்திற்கு சம்மந்தமில்லை என்று பீஜே கூறினால், சென்னை களஞ்சியம் பெண்கள் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த இரு தவ்ஹீத் ஜமாஅத் தாயிகளை உடனடியாக நிறுத்தியது போல், இஸ்லாமியக் கல்லூரியின் தலைவர், முதல்வர், ஆசிரியர்கள் என வியாபித்திருக்கும் தனது ஜமாத்தினரை உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறச் சொல்லுவாரா? 
  6. இஸ்லாமியக் கல்லூரி சரியென்றால், அதில் தனது ஜமாஅத் நிர்வாகிகள் அங்கம் வகிக்கலாம் என்றால், அதற்காக வெளிநாட்டு நிதியும் பெறலாம் என்றால், காயல்பட்டினம் இஸ்லாமிய கல்விச் சங்கமும் சரிதான் என்றும், அதற்காக வெளிநாட்டு நிதி பெறலாம் என்றும், அதை ஹாமித்பக்ரி மீதான காழ்ப்புணர்வில் தான் எதிர்த்தேன் என்றும் பீஜே சொல்லுவாரா?
  7. ஹாமித்பக்ரியின் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் இன்றும் அண்ணனின் அபிமானியாக இருக்கும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி உள்ளிட்ட அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தாயிகள் சிலர் சம்பளம் பெற்றது எதற்காக என்று பீஜே சொல்லுவாரா? 
  8. இலங்கை வெளிநாடு இல்லை என்றோ, அந்த நாட்டின் பணம் அன்னிய நிதியில்லை என்றோ, தனது கொள்கை அரபு நாட்டு நிதிக்கு மட்டும் தான் என்றோ பீஜே சொல்லுவாரா?
வெளிநாட்டு நிதியும், பீஜேயின் அப்பட்டமான பொய்களும் இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்....

வியாழன், 3 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 8]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரின் 7 வது தொடரில், அபூதாவூத் மொழிபெயர்ப்புக்காக லுஹாவுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டதையும், பின்பு அவர் அபூதாவூதை மொழிபெயர்த்து தராததால் பீஜேயின் திர்மிதியை வெளியிடுவதற்காக பீஜெயிக்கு ஒரு லட்சம் இஸ்லாமிய கல்விச் சங்கம் வழங்கிய விஷயங்களை எழுதி, திர்மிதி விற்பனை தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினோம். இப்போது அதே திர்மிதி தொடர்பாக இன்னும் சில விசயங்களைப் பார்ப்போம்.

திர்மிதி நூலை சாஜிதா புக் சென்டர் விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அண்ணனால் நியமிக்கப்பட்ட அபிமானியான அன்வர்பாஷாவிடம் கொடுத்து வந்த நிலையில், திடீரென்று மீதமுள்ள நூல்களை மீடியாவேல்டில் ஒப்படைக்கச் சொன்னார் பீஜே. அவ்வாறு ஒப்படைக்கப்பட்டு குறுகிய நாட்களில் 'எங்கோ தவறு நடந்து விட்டது' என்று வசனம் பேசி மீண்டும் நூல்களை சாஜிதாவிடம் ஒப்படைக்கச் செய்தார். இதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு மீடியாவேல்டிற்கு சென்று பிறகு சாஜிதாவிடம் திரும்பி வருகையில் 318 நூல்கள் குறைவாக இருந்ததாக அந்நிறுவனம் சொல்கிறது. அப்படியானால் இந்த 318 நூல்கள் மீடியாவேல்டினால் விற்கப்பட்டுள்ளது. இந்த நூல்களுக்கான தொகை மொத்த விலையில் குறைந்தது ஒரு நூல் 133 ரூபாய்கள் என்று கணக்கிட்டாலும், 42 ,294 ரூபாய்கள் ஆகும். இந்த தொகை ஹாமித்பக்ரியிடம் வழங்கப் படவில்லை. சாஜிதாவிடமும் வழங்கப்படவில்லை. அப்படியானால் எங்கே சென்றிருக்கும்?. வேறு எங்கே தவ்ஹீத் ஜமாத்திற்குத்தான்.

ஏற்கனவே திர்மிதி வகைக்காக சாஜிதா அன்வர்பாஷாவிடம் வழங்கியது 5 ,47 ,085
இப்போது மீடியாவேல்ட் மூலமாக விற்ற தொகை 42 ,294                                   
ஆக மொத்தம் 5 ,89 ,379 .00 ஐந்து லட்சத்து என்பத்தி ஒன்பதாயிரத்து முன்னூற்றி எழுபத்தி ஒன்பது ரூபாய்கள்.  

இந்த தொகை எத்தனை ஷேர் ஹோல்டர்களுக்கு எந்தெந்த ஷேர் ஹோல்டர்களுக்கு பீஜெயால் நியமிக்கப்பட்ட அன்வர்பாஷாவால் வழங்கப்பட்டது என்பதற்கு வெள்ளையறிக்கை ஒன்றை பீஜே வெளியிடவேண்டும். அப்படி வெளியிட தவறும் பட்சத்தில் ஹதீஸ் நூலை வெளியிடப்போகிறோம் என்று மக்களிடம் ஹாமித்பக்ரி வசூலித்து வந்த பணத்தை வைத்து, பீஜே திர்மிதி என்ற பெயரில் ஸ்வாஹா செய்துவிட்டார் என்று மக்கள் விளங்கிக்கொள்வார்கள். 

அடுத்து, தவ்ஹீத் ஜமாத்திருந்து நீக்கப்பட்ட[?] ஹாமித்பக்ரி, சாஜிதாவிடம் திர்மிதி விற்ற பணத்தை வாங்கி சாப்பிட ஆரம்பித்தார் என்று பீஜே சொன்னதை ஏற்கனவே நாம் எழுதியுள்ளோம். ஆனால் உண்மையில் சாஜிதாவிடமிருந்து ஹாமித்பக்ரி திர்மிதி வகையில் ஐந்து பைசா கூட வாங்கவில்லை என்று உறுதியாகக் கூறுகிறோம். பீஜே தனது கூற்றில் உண்மையாளர் என்றால், சாஜிதாவிடமிருந்து ஹாமித்பக்ரி எத்தனை ஆயிரம் ரூபாய்கள் வாங்கினார் என்று சாஜிதா வவுச்சருடன் காட்டவேண்டும்.இல்லையேல் இவர் ஹாமித்பக்ரி மீது அவதூறு சொன்ன பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

மேலும், நாம் மேலே பட்டியலிட்டுள்ள தொகையான 5 ,89 ,379 .00ஐந்து லட்சத்து என்பத்தி ஒன்பதாயிரத்து முன்னூற்றி எழுபத்தி ஒன்பது ரூபாய்கள் என்பது மொத்த விலையான 133 ரூபாய் கணக்குப்படி சுமார் 4431 நூல்களுக்கான தொகையாகும். [விற்கமுடியாத அளவுக்கு சேதமடைந்த நூல்கள் பற்றி முன்பு குறிப்பிட்டுள்ளோம்]
இந்த தொகை ஹாமித்பக்ரியிடம் செல்லவில்லை. ஜமாத்திற்குத்தான் சென்றுள்ளது. அப்படியானால் மோசடியாளர் யார்? ஹாமித்பக்ரியா? பீஜேயா? அல்லது அன்வர்பாஷாவா? சிந்தியுங்கள் சகோதரர்களே! 

திர்மிதி வெளியான சில நாட்களிலேயே ஹாமித்பக்ரி ஜமாத்திலிருந்து நீக்கப் பட்டதாகவும், அவர் சாஜிதாவிடமிருந்து திர்மிதி விற்ற காசை வாங்கி சாப்பிட்டதாகவும், ஷேர் ஹோல்டர்களை முழுமையாக ஏமாற்றியதாகவும் பீஜே சொல்கிறாரே! ஷேர் ஹோல்டர்களுக்கு பணத்தை திருப்பித் தரவேண்டும் என்பதற்காக முயற்சித்த ஹாமித்பக்ரி அவர்கள், லுஹாவுக்கு ஒரு லட்சம் வாயில் தட்டினார். பீஜெயிக்கு ஒரு லட்சம் வாயில் தட்டினார். பின்பு புத்தகங்கள் வெளியான பிறகு அதிலிருந்து ஐந்து பைசா வாங்காமல் அனைத்தும் ஜமாத்திற்கு கிடைக்கச் செய்தார். அதன் மூலம் ஷேர் ஹோல்டர்களுக்கு பணம் போய் சேர்ந்திருக்கும் என்று நம்பினார். ஆனால் திர்மிதி விற்ற காசை லட்சக்கணக்கில் வாங்கிய ஜமாஅத், அதை என்ன செய்ததோ தெரியவில்லை. இன்று ஹாமித்பக்ரி மீது பழிபோட்டு விட்டு, பரிசுத்த வேதாந்தம் பேசுகிறார் பீஜே. திர்மிதி நூல் காசை சாப்பிட்டு மக்களை ஹாமித்பக்ரி ஏமாற்றவில்லை என்பதை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறோம். நாம் மேலே எழுதியுள்ளபடி, திர்மிதி காசை ஹாமித்பக்ரி வாங்கித் தின்றதை சாஜிதா வவுச்சருடன் பீஜே காட்டத் தயாரா?

அயல்நாட்டு நிதியில் பீஜேயின் அப்பட்டமான பொய்கள் இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்.