அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 30 மார்ச், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 3]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் இதுவரை நாம் கேட்ட எந்த கேள்விக்கும் அறிஞர் பீஜே பதிலளிக்கவில்லை என்பதை நமது தொடரில் மேற்கோள் காட்டியுள்ளோம். நமது இரண்டாவது தொடரின் இறுதியாக,  ''நம் ஜமாஅத்தில் இப்போது இல்லாத இரண்டு பிரச்சாரகர்கள், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நாம் செயல்பட்டபோது, நம் ஜமாஅத்தின் சார்பில் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார்கள் என்று கூறியுள்ளார். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் வெளிநாட்டிற்கு பிரச்சாரத்திற்கு சென்ற அந்த இரு பிரச்சாரகர்களின் பெயரை பீஜே பகிரங்கமாக சொல்லவேண்டும். என்றும், அப்படி அவர் சொல்லும் பட்சத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பெயரால் வசூல் செய்யப்பட்ட விசயத்தில்  தனக்கோ  தனது தவ்ஹீத் ஜமாத்திற்கோ சம்மந்தமில்லை என்ற அவரது பொய் முகம் வெளிப்படும் இன்ஷா அல்லாஹ்'' என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

ஒரு வாரம் கழிந்தும் நமது இந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. அவர் அந்த இரு தாயிகளின் பெயரை சொல்லவேண்டும். சொல்லவில்லையானால் இவரது அனுமதியின் பெயரில் தான் அந்த தாயிகள் இருவரும் வெளிநாட்டில் வசூல் வேட்டையாடினார்கள் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

அடுத்து இந்த வெளிநாட்டு நிதி விசயத்தில் அறிஞர் பீஜேயின் இன்னொரு முரண்பாட்டைப் பார்ப்போம்.

மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்கள் பீஜேயை நோக்கி, ''அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இவர்கள் இயங்கியபோது, இவர்களது அப்போதைய தலைவரும், அதற்கடுத்த தலைவராக செயல்பட்ட, தற்போதும் இவரது அமைப்பில் உள்ள ஒரு ஆலிமும் 1999 களில் குவைத்திலுள்ள லஜ்னத்துல் காரதில் ஹிந்திய்யா என்ற அமைப்பிடம் நிதி உதவி பெற முயற்சித்து முடியாமல் போனது. இதுகுறித்து நான் தங்கியிருந்த அறையில் இருந்துதான் அவர்கள் பேசித் திட்டங்கள் பலவும் தீட்டினார்கள். அரபுப்பணம் கிடைக்காதவர்கள் உள்நாட்டு வசூலை இலக்காகக் கொண்டு சீ...சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று நரி நாடகமாடுகின்றனர். இதுதான் உண்மையாகும்.'' என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார்.

நன்றாக கவனிக்க வேண்டும். மவ்லவி இஸ்மாயில் ஸலபி தனது விமர்சனத்தின் முக்கிய அம்சமாக,

  • வெளிநாட்டு நிதி பெறக்கூடாது என்ற பைலாவையுடைய, பீஜேயும் அங்கம் வகிக்கும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் மவ்லவி ஹாமித்பக்ரி, அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் மவ்லவி சைபுல்லாஹ் ஹாஜா ஆகிய இருவர், வெளிநாட்டு நிதி பெறும் நோக்கில் குவைத் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
  • இருவரும் குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்தை அணுகியுள்ளனர்.
  • அதற்காக மவ்லவி இஸ்மாயில் ஸலபி தங்கியிருந்த அறையில் திட்டங்கள் தீட்டியுள்ளனர்.

இதுதான் இஸ்மாயில் சலபியின் விமர்சனத்தின் முக்கிய அம்சமாகும். 

இதற்கு மறுப்பு எழுதிய அறிஞர் பீஜே, '' இஸ்லாமிய கல்விச்சங்கத்தின் நிறுவனரான ஹாமித்பக்ரியும், அச்சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ்வும், 'தவ்ஹீத் ஜமாஅத் தான் வெளிநாடுகளில் உதவி வாங்காது. நாம் சுயேட்சையான நிறுவனம் தானே? நாம் உதவி வாங்கினால் என்ன என்று ஆலோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினர். அதன் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பினார்கள். இலங்கை சென்றபோது ஜம்மியத்து அன்ஸாரிஸ் ஸுன்னா, ஷபாப், ஆகிய நிறுவனங்களிடம் பரிந்துரைக் கடிதங்கள் கேட்டனர். இதில் எனக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சம்மந்தம் இல்லை. இந்த விவரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்தபோது தவ்ஹீத் ஜமாஅத் நிரவாகக்குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக்காட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இதுபோன்ற உதவிகளைப் பெறக்கூடாது என்று முடிவு செய்தோம். இதன் பின்னர் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர்.'' என்று பீஜே பதிலளித்துள்ளார். 

பீஜேயின் இந்த பதிலில் இருந்து நாம் கேட்கும் கேள்விகள்;

  1. தனக்கும் தவ்ஹீத் ஜமாஅதுக்கும் சம்மந்தமில்லாத இஸ்லாமிய கல்விச்சங்கம் என்ற பெயரில், அதன் அங்கத்தவர்களான ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் வெளிநாட்டி நிதி பெறும் நோக்கில் ஆலோசனை செய்ததையும், அதற்காக இலங்கையில் பரிந்துரைக் கடிதம் பெற்றதையும், வெளிநாட்டிற்கு நிதி பெறும் நோக்கில் கடிதங்கள் அனுப்பியதையும் ஒப்புக்கொண்டுள்ள பீஜே, இந்த மூன்று விஷயங்கள் பீஜேவுக்கு தெரிந்தே நடந்ததா? அல்லது பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டரா? என்று சொல்லவேண்டும்.
  2. [வெளிநாட்டு நிதி பெற முயற்சிக்கும்] இந்த விவரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்தபோது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக்குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக்காட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இதுபோன்ற உதவிகளைப் பெறக்கூடாது என்று முடிவு செய்தோம். இதன் பின்னர் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர் என்று பீஜே சொல்வது உண்மையானால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய் என்று பீஜே சொல்வாரா?
  3. ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டது உண்மை என்றால், தவ்ஹீத் ஜமாஅத் முடிவை ஏற்று அவர்கள் வெளிநாட்டு நிதி பெறும் முடிவை கைவிட்டு விட்டனர் என்று பீஜே சொன்னது பொய்யா?
  4. நிர்வாகக்குழு முடிவுக்குப் பின்னரும் ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டது உண்மை என்றால், நிர்வாக்குழு முடிவை மீறிய அவர்கள் மீது பீஜே எடுத்த நடவடிக்கை என்ன?
  5. ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற எடுத்த முயற்ச்சிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக்குழு முடிவால் கைவிடப்பட்டது என்றால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய்யாகி விடுகிறது. அப்படியானால், அபூதாவூத் மொழியாக்கம் ஷேர் பிடிப்பதற்காக இவர்கள் தனிப்பயணம் மேற்கொண்டார்கள் என்று பீஜே சொல்வாரா?
  6. ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற எடுத்த முயற்ச்சிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக்குழு முடிவால் கைவிடப்பட்டது என்றால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய் என்றால், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குவைத் சென்ற அந்த இரு தாயிகள் பெயரை சொல்லத் தயக்கம் ஏன்?
அறிஞர் பீஜே மவுனம் கலைந்து மக்கள் தெளிவடையும் வகையில் பதிலளிப்பாரா?
தொடரும் அருளாளன் நாடினால்...

வெள்ளி, 23 மார்ச், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 2]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையில் அன்று ஆகுமானது என்று சொன்ன பீஜே அவர்கள், இன்று மனோஇச்சை பாலிஸி பேசி வெளிநாடு நிதி பெறமாட்டோம் என்று சட்டம் போட்டுக்கொண்டு தன்னை தலைவராக கொண்ட ஜமாஅத்தை பின்பற்றச் செய்கிறார் இது முரணில்லையா? என்று கேட்டோம். இன்றுவரை இதற்கு பீஜே பதில் சொல்லவில்லை. 

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வஹீ அடிப்படையிலான கட்டளைகளை மட்டுமே பின்பற்றுவோம். அவர்கள் மனிதர் என்ற அடிப்படையில் சொன்னதை ஏற்கமாட்டோம் என்று சொன்ன பீஜே, அல்லாஹ்வின் வஹீ அடிப்படியில் ஆகுமான ஒன்றை, இவரது சொந்த கற்பனையில் உதித்த சட்டங்களை சொல்லி புறந்தள்ளுவது மட்டும் முரணில்லையா? என்று கேட்டோம். பீஜே பதிலளிக்கவில்லை. 

மார்க்க அடிப்படையில் ஆகுமான நிதியை, அதுவும் ஆகுமானதுதான் என்று இவரே ஒத்துக்கொண்ட நிதியை பெற்று நலப்பணிகள் செய்பவர்களை கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று இவர் விமர்சிப்பது சரியா என்று கேட்டோம். பீஜே பதிலளிக்கவில்லை. ஆனால் பீஜேயாகிய நீங்கள் அரபு நாட்டில் பணம் வசூலித்தீர்களா? என்று ஒரு சகோதரர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்துள்ளார். இதிலிருந்து தான் முரண்பட்டு நிற்பதை அவரே ஏற்றுக்கொண்டு விட்டார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

உணர்விலும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், நீங்கள்[பீஜே] அரபுநாட்டில் பணம் வசூலித்தீர்களா? என்ற கேள்வி-பதிலை பதிவு செய்துள்ள பீஜே, வழக்கம் போல இதிலும் முரண்பட்டு தன்னை அடையாளம் காட்டத் தவறவில்லை. அதைப் பார்ப்பதற்கு முன்னால் அந்த பதிலில், ''அரபுகளிடம் வசூல் செய்ய நான் ஆட்களை அனுப்பினேன் என்பதும், திர்மிதி நூலுக்கு அரபுமொழியில் மதிப்புரையும் முன்னுரையும் வாங்கினேன் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே பதிலளித்ததும் புளித்துப் போனதுமாகும்.''' என்று கூறியுள்ளார். ஒரு விமர்சனத்திற்கு சம்மந்தப்பட்டவர் பதிலளித்த பின்பும் அதை மறுநாளோ அல்லது மறு வாரமோ, மறு மாதமோ, மறு ஆண்டோ கிளப்புவது புளித்துப் போன விஷயம் என்றால், அதே உணர்வில் இவர் பதிலளித்த அதே எடிசனில் பாக்கர் மற்றும் ஜவாஹிருல்லாஹ் சம்மந்தமாக ஒரு விமர்சனம் வெளியாகியுள்ளது. அந்த விமர்சனத்திற்கு சம்மந்தப்பட்ட பாக்கரும்-ஜவாஹிருல்லாஹ்வும் முன்பே பதிலளித்துள்ள நிலையில், மீண்டும் கிளப்புவது மட்டும் புளித்துப் போனதாக இவருக்குத் தெரியவில்லையா? உணர்வில் மட்டுமல்ல. வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் மேற்கண்ட இருவர் பற்றி இவராலும், இவரது ஜமாத்தினராலும் அந்த விமர்சனம் வைக்கப்படுகிறதே. அப்படியானால் இவர்களுக்கு மட்டும் இன்னும் புளிப்புத் தட்டவில்லையா? அல்லது அடுத்தவர் பற்றிய விமர்சனத்தை நான் ஆயுளுக்கும் செய்வேன்.ஆனால் என்னைப் பற்றிய விமர்சனத்தை நான் பதில் கொடுக்கும் பதிலை ஏற்றுக் கொண்டு உடனே கைகழுவி விடவேண்டும் என்கிறாரா? ஒரு விமர்சனத்திற்கு பதில் கொடுப்பது மட்டும் போதுமானதன்று. கொடுக்கும் பதில் வைக்கப்பட்ட விமர்சனத்தை உடைத்து நொறுக்கும் வகையில் இருக்கவேண்டும். அப்படி இல்லாத நிலையில் அறிஞர் பீஜேயின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் 'கை நிறைய கழுதை விட்டை' என்றாகிவிடும். அந்த வகையில் தான் பீஜே குறித்த விமர்சனங்களுக்கு அவரால் அளிக்கப்படும் பதில்கள் இருக்கின்றன. எனவே தான் அவரைப்பற்றிய விமர்சனங்கள் புதிய புதிய கோணங்களில் அவரைத் தாக்குகின்றன என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறோம்.

அடுத்து, இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பிற்கும், தனக்கும் சம்மந்தமில்லாத ஒரு நிறுவனம் என்று காட்டுவதற்காக கடும் பிராயசித்தம் செய்து முயற்சித்துள்ளார் பீஜே. இந்த இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதில் பீஜேயின் முரண்பட்ட கருத்தை முதலில் பார்ப்போம். 'ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும்' என்று ஒரு நீண்ட கட்டுரையை தனது இணையதளத்தில் 19 .10 .2010 அன்று வெளியிட்டார். அதில், 

''ஆனால் இவர்[ஹாமித்பக்ரி] தவ்ஹீத் ஜமாத்திற்கு தலைவராக இருந்துகொண்டே, இஸ்லாமிய கல்விச்சங்கம் என்ற பெயரில் லட்டர் பேட் அமைப்பை ஏற்படுத்தி, அதற்காக தமிழகம் முழுக்க வசூல் வேட்டையில் இறங்கினார். சம்பளம் கொடுக்கக் கூட நிதி இலலமல் தவ்ஹீத் ஜமாஅத் தள்ளாடும் நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளை தனது லட்டர் பேடு சங்கத்திற்கு நிதி திரட்ட பயன்படுத்திக் கொண்டார். தனக்கு மட்டுமே சொந்தமான லட்டர் பேட் இயக்கத்தின் பெயரால் எவ்வளவு நிதி திரட்டினாலும்  யாரும் அதைக் கேட்க முடியாது என்பதுதான் இதற்கு காரணம்.'''என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றாக கவனியுங்கள். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தலைவரான ஹாமித்பக்ரி அவர்கள், தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவராக இருந்துகொண்டே தனக்கு மட்டுமே சொந்தமான இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற லட்டேர்பேடு சங்கத்தை உருவாக்கி, தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளை பயன்படுத்தி தமிழகம் முழுக்க வசூல் வேட்டையாடினார். தனக்கு மட்டுமே சொந்தமான இயக்கம் என்பதால் யாரும் நம்மிடத்தில் கேளிவி கேட்க முடியாது என்ற துணிவில் ஹாமித்பக்ரி இப்படி வசூல்வேட்டை நடத்தினார் என்பது மேற்கண்ட பீஜேயின் வாக்குமூலம் சொல்கிறது.  இந்த வாக்குமூலம் வாயிலாக, இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது மோசடி வசூல் செய்வதற்காக ஹாமித்பக்ரி தனக்கு மட்டும் சொந்தமாக உருவாக்கிக் கொண்ட ஒரு சங்கம் என்று பீஜே கூறுகிறார். இதை நன்றாக மனதில் வைத்துக் கொண்டு அடுத்த செய்திக்கு வாருங்கள்;

'ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும்'  என்ற அதே கட்டுரையில், ''இந்த விஷயம் [ஹாமித்பக்ரியின் வசூல் மோசடி] தெரிந்தவுடன் அவரை [ஹாமித்பக்ரியை] தமுமுக அலுவலகத்திற்கு அழைத்து நான், லுஹா, சைபுல்லாஹ் ஹாஜா, அலாவுதீன் அடங்கிய குழுவில் கடுமையாக விசாரணை  நடத்தினோம்.  ஜமாஅத்தின்  பெயரால்   கள்ள வசூல் செய்வதற்கா உம்மை தலைவராக நாங்கள்  நியமித்தோம்? என்று கடுமையாக கண்டித்தேன். எந்த காலத்திலும் நம்பிக்கை துரோகத்தை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்தோம். என் வாழ்நாளில் நான் அதிகமாக கோபப்பட்ட சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று என்கிறார் பீஜே

பீஜேயின் இந்த வாக்குமூலத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற ஒன்றை ஹாமித்பக்ரி அவர்கள் தொடங்கியதே இவருக்கு தெரியாதது போன்றும், அந்த சங்கத்தின் பெயரால் தமிழகம் முழுக்க ஹாமித்பக்ரி வசூல் வேட்டை நடத்தி அமுக்கியபின் தான் இவருக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரியவந்தது போன்றும் உடனடியாக கண்கள் சிவக்க, லுஹா, சைபுல்லாஹ், அலாவுதீன் போன்ற சகாக்கள் சகிதம் ஹாமித்பக்ரியை 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கியதாக கூறுகிறார் பீஜே. இதில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தை உருவாக்கி வசூல் மோசடி செய்தது ஹாமித்பக்ரி மட்டுமே என்றும், ஹாமித்பக்ரி மட்டுமே இந்த சங்கத்தின் ஏகபோக உரிமையாளர் என்ற கருத்தையும், ஆழமாக பதிவு செய்கிறார் அறிஞர் பீஜே. இதையும் மனதில் நன்றாக பதிவு செய்துகொண்டு அடுத்து வாருங்கள்.

மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களின் மறுக்கு மறுப்பு என்ற கட்டுரை ஒன்றை பீஜே எழுதுகிறார். அதில், ஹாமித்பக்ரி அவர்கள் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தினார். அது தவ்ஹீத் ஜமாஅத் கீழுள்ள நிறுவனம் அல்ல. அதில் சைபுல்லாஹ் ஹாஜாவும் அங்கமாக இருந்தார்.'' என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை தனது உணர்வு பதில்கள் பகுதியிலும் பதிவு செய்துள்ளார்.

ஹாமித் பக்ரியும் கைவிட்ட தமுமுகவும் என்ற தனது முந்தைய வாக்குமூலத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற ஒன்று ஹாமித்பக்ரியின் ஏகபோக நிறுவனம் என்று சொன்ன பீஜே, அந்த ஏகபோக நிறுவனம் சார்பாக ஹாமித்பக்ரி வசூல் வேட்டை நடத்தியபோது, பக்ரியை விசாரணை நடத்திய குழுவில் சைபுல்லாஹ்வும் இருந்தார் என்று சொல்லியுள்ள பீஜே, இந்த வாக்குமூலத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் சைபுல்லாஹ்வும் ஒரு அங்கம் எனக் கூறியுள்ளார். அப்படியானால் ஹாமித்பக்ரியின் வசூல் மோசடியில் சைபுல்லாஹ்வும் ஒரு அங்கம் என்று ஆகிவிடுமே? பிறகு எப்படி சைபுல்லாஹ் அவர்கள், ஹாமித்பக்ரி மீதான இந்த விசாரணையில் அங்கம் வகிக்க முடியும்? தானும் அங்கம் வகிக்கும் ஒரு சங்கத்திற்காக வசூல் செய்ததற்காக சைபுல்லாஹ் அவர்கள் ஹாமித்பக்ரியை எப்படி கண்டிக்க முடியும்? இஸ்லாமிய கல்விச் சங்கம் வசூல் செய்தது தவறு என்றால், ஹாமித்பக்ரியை கடுமையாக எச்சரித்ததாக கூறும் பீஜே, அதே சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ் அவர்களை பற்றி வாய் திறக்காதது முரணில்லையா? ஹாமித்பக்ரி அவர்கள் தமிழகம் முழுக்க வசூல் செய்தது அச்சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ் அவர்களுக்கு தெரியாது என்று சொல்வரா பீஜே? மேலும் இச்சங்கம் வசூல்  செய்தது தவறு என்றால், உடனடியாக இச்சங்கத்தை கலைக்கவேண்டும் என்று ஹாமித்பக்ரிக்கு உத்தரவிட்டாரா பீஜே? இல்லையே? ஹாமித்பக்ரியின் இந்த வசூல் மோசடி சங்கத்தில் இருந்து சைபுல்லாஹ் அவர்களை உடனடியாக விலகச் சொன்னாரா பீஜே? இல்லையே? அப்படியானால் இச்சங்கம் ஹாமித்பக்ரி வசூல் மோசடி செய்வதற்காக தனக்காக உருவாக்கிக் கொண்டது என்று பீஜே சொன்னது பொய் என்பது உறுதியாவதோடு, இச்சங்கம் பீஜேயின் பார்வையில்தான் செயல்பட்டுள்ளது. அதை பீஜேயும் அங்கீகரித்துதான் செயல்படச் செய்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. அதோடு இச்சங்கத்தில் ஹாமிபக்ரி, சைபுல்லாஹ் என்ற இரு அறிஞர்கள் மட்டும் தான் அங்கம் வகித்தார்கள் என்று பீஜே சொல்லத் தயாரா? அப்படி பீஜே சொல்லும் பட்சத்தில் இந்த சங்கத்திற்கும், அனைத்து தவ்ஹீத் ஜமாத்திற்கு இருந்த உறவு சந்தி சிரிக்கும் இன்ஷா அல்லாஹ்.

அடுத்து இச்சங்கம் சார்பாக வெளிநாட்டில் வசூல் செய்யப்பட்டதில் பீஜேவுக்கோ, அல்லது தவ்ஹீத் ஜமாஅத்திற்கோ சம்மந்தமில்லை என்ற பீஜேயின் பொய்யை அலசுவதற்கு முன்னால், மேலே நாம் சொல்லியுள்ள பீஜேயின் முரண்பாடுகளுக்கும் பொய்களுக்கும் பீஜே பதில் சொல்லவேண்டும். அடுத்து, அன்பளிப்பு சம்மந்தமான கேள்விக்கு பதில் கூறிய பீஜே அதில், ''நம் ஜமாஅத்தில் இப்போது இல்லாத இரண்டு பிரச்சாரகர்கள், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நாம் செயல்பட்டபோது, நம் ஜமாஅத்தின் சார்பில் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார்கள் என்று கூறியுள்ளார். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் வெளிநாட்டிற்கு பிரச்சாரத்திற்கு சென்ற அந்த இரு பிரச்சாரகர்களின் பெயரை பீஜே பகிரங்கமாக சொல்லவேண்டும். அப்படி அவர் சொல்லும் பட்சத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பெயரால் வசூல் செய்யப்பட்ட விசயத்தில்  தனக்கோ  தனது தவ்ஹீத் ஜமாத்திற்கோ சம்மந்தமில்லை என்ற அவரது பொய் முகம் வெளிப்படும் இன்ஷா அல்லாஹ்.

தொடரும் அருளாளன் நாடினால்...

திங்கள், 19 மார்ச், 2012

அயல்நாட்டு நிதியும்; அப்பட்டமாக பொய் சொல்லும் பீஜேயும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
''நல்ல விசயத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள்[5 ;2 ] என்று அல்லாஹ் கூறுகின்றான். உதவலாம் என்பதில் பெறலாம் என்பதும் அடக்கம். சவூதியிலிருந்தோ வேறு எங்கிருந்தோ நல்ல காரியங்களுக்கு பணம் வந்தால் அதைப் பெறுவதில் எந்த தவறும் இல்லை. எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம். அல்ஜன்னத் ஜூன் 95

சவூதி மற்றும் எந்த பகுதியிலிருந்தும் பணம் பெறுவது சரியானதுதான் என்றும், எங்களுக்கு பணம் வரவில்லை என்பதால்தான் வரவில்லை என்கிறோமே தவிர வந்தால் பெற்றுக்கொள்வோம் என்று பீஜே அவர்கள் அன்று சொன்னதற்கு மாற்றமாக, இன்று 'பாலிசி' பேசி முரண்படுகிறார். இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லையே இரண்டாகப் பிரித்து, வஹீ அடிப்படையில் அவர்கள் சொன்னதை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்றும், நபியவர்கள் நேரம்போகாமல் பேசிய[?]வைகளை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற கொள்கையுடைய அறிஞர் பீஜே, வஹீ அடிப்படையில் வெளிநாட்டு நிதி கூடும் என்று சொன்ன தீர்ப்புக்கு மாற்றமாக, பாலிசி எனும் தனது கருத்தை சட்டமாக்கி அதை தன்னை தலைவராக கொண்ட ஜமாஅத்தின் சட்டமாக்கி, தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டவர்களை பின்பற்றச் செய்கிறார் என்ற நமது கருத்துக்கு சம்மந்தப்பட்ட அறிஞர் பீஜே பதில் சொல்லவில்லை. ஆனால் அவரது இயக்கத்தினர் பதில் என்ற பெயரில் பாய்ந்து வந்து நேரடியாக 'பஸ்'ஸில் ஏறி உட்கார்ந்து விட்டார்கள். இது ஒருபுறமிருக்க மேற்கண்ட அல்ஜன்னத் பதிலில், 
எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம் என்ற தனது கூற்றிற்கு மீண்டும் முரண்பட்டு தான் அப்பட்டமாக பொய் சொல்லும் ஒரு பொய்யர் தான் என்று பீஜே நிரூபிப்பதை கீழே படியுங்கள்;

''இன்னொன்றையும் இந்த இடத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். வெளிநாட்டில் உதவி வாங்கக்கூடாது என்பது ஆரம்பம் முதலே நான் கடைபிடித்த கொள்கை அல்ல. ஆரம்பத்தில் ஜாக் இயக்கத்தில் நான் இருந்தபோது, அந்த இயக்கம் வெளிநாடுகளில் உதவி பெற்ற நிலையிலும் அதில் நான் இருந்தேன். நான் என்னளவில் அத்தகைய உதவியை மறுத்தேனே தவிர அந்த இயக்கம் உதவி பெற்றதை எதிர்க்கவில்லை. அதன் அடிப்படையில் தான் சலபிகள் கூட்டத்தினரின் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டேன். கஷ்டப்படும் சிலருக்காக நானே அந்த காலகட்டத்தில் எதாவது [வெளிநாடுகளில்] உதவி வாங்கிக் கொடுங்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.எழுதியும் இருக்கிறேன். மற்றவர்களுக்காக நான் உதவி கேட்டு எழுதிய கடிதங்கள் நிறையவே உள்ளன.கமாலுத்தீன் மதனியிடம் கேட்டால் தருவார். நாளடைவில் பணமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை கண்டு வெறுத்த நான் அதன் பிறகு தான் இதை[ வெளிநாட்டு நிதி] வெறுக்கலானேன். லிங்க்;

மேற்கண்ட பீஜேயின் இந்த வாக்குமூலம் மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களுக்கு அவர் எழுதிய மறுப்பில் இருந்து எடுத்ததாகும். இந்த வாக்குமூலத்தில், ஜாக்கில் இவர் இருந்தபோது ஜாக் வெளிநாட்டு நிதியை பெற்றுள்ளது. அதை இவரும் சரிகண்டு அந்த அமைப்பில் இருந்துள்ளார். அந்த ஜாக் வாங்கும் வெளிநாட்டு சல்லிக்காக, இவரும் ஒத்து ஊதும் வகையில் இவருக்குப் பிடிக்காத சலபிக் கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார். கஷ்டப்படும் பலருக்கு வெளிநாட்டு நிதியை பெற்றுத்தருமாறு கூறியுள்ளார். பல கடிதங்களும் வரைந்துள்ளார். இப்படி தான் வாங்காவிட்டாலும் தனது இயக்கம் வாங்கியதை சரிகண்ட இவர், அதற்காக இவரது கொள்கைக்கு முரண்பட்ட சலபியையும் சரி கண்டு அவர்களின் மேடையில் முழங்கிய இவர், மற்றவர்களுக்காக வெளிநாட்டு நிதி பெற்றுத்தருமாறு கோரிக்கை வைத்த இவர், இன்று தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதோடு, மற்றவர்களை அரபு நாட்டு சலிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிப்பது கேளிக்கூத்தல்லவா? ஜாக் பெற்ற சல்லிக்காக இவர் சலபிக்கூட்டத்தில் மாரடித்தார் என்று சொல்லலாமா? இதைஎல்லாம் விட ஜாக் வெளிநாட்டு நிதி பெற்று வந்த நிலையில், இவர் ஜாக்கில் இருந்த நிலையில், அல்ஜன்னத் பத்திரிக்கையில் பீஜே ஆசிரியராகவும், கமாலுத்தீன் மதனி வெளியீட்டாளர் ஆகவும் இருந்த காலகட்டத்தில் கேட்கப்பட்ட வெளிநாட்டு நிதி பற்றிய மேற்கண்ட கேள்விக்கு, எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம் என்று அப்பட்டமாக பொய் சொல்லியுள்ளார். எங்களுக்கு வரவில்லை என்பதன் அர்த்தம், எனக்கு அதாவது பீஜே எனும் எனக்கு வரவில்லை என்று அர்த்தம் என்று வார்த்தை ஜாலம் காட்டமுடியாது. அப்படி பீஜே தனிப்பட்ட தனக்கு வரவில்லை என்றால், 'நான் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு நிதி வாங்கவில்லை. ஆனால் நான் சார்ந்துள்ள ஜாக் அமைப்புக்கு வெளிநாட்டு நிதி வருகிறது என்று பதில் சொல்லியிருக்க வேண்டும். வெளிநாட்டு நிதியை தனது அமைப்பு வாங்கிய நிலையில் அதை மறைத்து எங்களுக்கு அப்படி பணம் எதுவும் வரவில்லை என்று அப்பட்டமாக பொய் சொல்லியுள்ள இவரைத் தெரிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தை தூய வடிவில் சொல்ல துவங்கப்பட்ட அல்ஜன்னத்தில் அதன் ஆசிரியரான இவரே ஒரு பொய்யராக இருந்துள்ளார். இவர் நினைத்தால் எதை மறைக்கவும் எத்தனை பொய்யும் சொல்லத் தயங்காதவர் என்று அறிந்துகொள்ளுங்கள். 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

சனி, 17 மார்ச், 2012

சொந்த செலவில் கட்டிய பள்ளிவாசல்கள்; பீஜே அன்றும் இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

''ஒருவர் பல லட்சம் செலவு செய்து பள்ளிவாசல் கட்டுகிறார். அப்பள்ளிக்குத் தம் பெயரை வைக்க விரும்புகிறார். மார்க்கம் அதை அனுமதிக்கிறதா? என்ற கேள்விக்கு அல்ஜன்னத் மார்ச் 95 அல்ஜன்னத் மாத இதழில் பதிலளித்துள்ள அறிஞர் பீஜே, ''பள்ளிவாசல்கள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன.[72 ;18 ] என்ற வசனத்தை முன்வைத்து, ஒரு மனிதரோ ஒரு கூட்டத்தாரோ தம் சொந்த செலவில் பள்ளிவாசலைக் கட்டினாலும் அதில் அவருக்கோ அக்கூட்டத்திற்கோ தனி உரிமை ஏதுமில்லை' என்று கூறிவிட்டு, ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமானது என்ற எண்ணத்தில் இன்னாருடைய பள்ளி என்று பெயர் சூட்டகூடாது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். பல்வேறு பள்ளிவாசல்கள் உள்ள ஊர்களில் ஒரு குறிப்பிட்ட பள்ளிவாசலை அடையாளம் காண்பதற்காக பெயர் சூட்டினால் அதில் தவறேதுமில்லை என்கிறார். அதோடு பள்ளிவாசலை கட்டியவரே தன் பெயர் சூட்டப்பட்ட வேண்டும் என்று ஆசைப்படுவது அவரது நோக்கத்தின் தூய்மையின்மையைக் காட்டுகின்றது என்றும் கூறுகிறார்.

ஒருவர் தன் சொந்த செலவில் பள்ளிவாசல் கட்டினாலும் அதில் அவருக்கு எந்த உரிமையுமில்லை. எந்த அளவுக்கென்றால் தான் கட்டிய அப்பள்ளியில் தனது பெயரை சூட்டக்கூட உரிமையில்லை என்பது அறிஞர் பீஜே அவர்களின் பதிலின் சாரம்சமாகும். அப்படியே இந்த பதிலை எஸ்.பி.பட்டினம் பள்ளிவாசலுக்கு பொருத்திப் பார்ப்போமா? எஸ்.பி. பட்டினத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் சொந்த செலவில் ஒரு பள்ளிவாசலை நிறுவி அதை மக்களின் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்து அந்த பள்ளியில் பல ஆண்டுகளாக தொழுகை நடைபெற்று வருகையில், திடீரென்று ஏதோ தனது சொத்தை விற்பதுபோல் பள்ளிவாசலை அறிஞர் பீஜே அவர்களின் ஜமாத்திற்கு பத்திரம் முடித்து கொடுக்கிறார்கள். அதை பீஜேயும் ஏற்றுக் கொள்கிறார். அதையொட்டி ஏற்பட்ட பிரச்சினையில் தொழுகை நடந்துவந்த பள்ளி பூட்டப்பட்டு இன்று பாழடைந்த மண்டபமாய் காட்சி தருகிறது. ஒருவர் தன் சொந்த செலவில் கட்டிய பள்ளிக்கு தன் பெயர் வைப்பதற்கு ஆசைப்பட்டால் அங்கே அவரது நோக்கம் தூய்மையற்றது என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே, இன்று, அல்லாஹ்வுக்காக மக்களின் தொழுகைக்காக வக்ப் செய்யப்பட்ட பள்ளியை ஒரு சொத்தைப் போல் பாவித்து அந்த தம்பதி எழுதித் தர முன்வந்தபோது, 'நீங்கள் என்றைக்கு அந்த பள்ளியை மக்களின் தொழுகை பயன்பாட்டுக்கு விட்டுவிட்டீர்களோ அதற்கு  பின்னால் அப்பள்ளி மீது உங்களுக்கு கடுகளவும் உரிமையில்லை. அதை நீங்கள் எங்களுக்கோ வேறு யாருக்கோ நீங்கள் பத்திரம் முடித்து தரமுடியாது. அப்படி நீங்கள் பத்திரம் முடித்து தந்தால், நீங்கள் அந்த பள்ளியை உங்கள் சொந்த சொத்தாக கருதியுள்ளீர்கள் என்று அர்த்தம்.  அப்பள்ளியை கட்டிய உங்களின் நோக்கம் தூய்மையற்றதாகிவிடும் என்று தடுத்தாரா பீஜே? இல்லை. அப்பள்ளியை தனது ஜமாஅத் சொத்தாக்கி கொண்டார். இது பீஜேயின் முரண்பாடில்லையா? மேலும் தொழுகை நடைபெற்று பிறகு பூட்டப்பட்டு இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை மீட்போம் என்று சொல்லும் பீஜே, அல்லாஹ்வை வாங்கிய பள்ளியை பூட்டப்படுவதற்கு காரணமாகி நிற்கிறாரே! இது அல்ஜன்னத்தில் அவர் சொன்ன பதிலுக்கு முரணில்லையா? முதலில் இந்த எஸ்.பி.பட்டினம் பள்ளி மீதான தனது ஜமாஅத்தின் உரிமையை விலக்கிக் கொண்டு அப்பள்ளியை திறந்து அல்லாஹ்வை வழிபடச் செய்து தனது செயலுக்கு பரிகாரம் தேடட்டும்.

ஞாயிறு, 11 மார்ச், 2012

வெளிநாட்டு நிதி; பீஜே அன்றும்-இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

வெளிநாட்டு அரசுகளிடம் இருந்தோ, நிறுவனங்களிடம் இருந்தோ நிதி உதவி பெறமாட்டோம் என்று அறிஞர் பீஜே அவர்களின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பைலா வைத்துள்ளதை அனைவரும் அறிவோம். வெளிநாட்டு நிதி பெறுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அறிஞர் பீஜே, வெளிநாட்டு நிதி பெற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்று ஆறு அம்சங்களை பட்டியலிட்டுள்ளார்.
  1. மக்களுக்கும் ஜமாத்திற்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும்.
  2. மக்களுக்கு கணக்கு காட்ட மறுக்கும் நிலை ஏற்படும்.
  3. கணக்கற்ற பொருளாதாரம் காரணமாக ஆடம்பர ஜமாஅத்தாக மாறிவிடும்.
  4. தாவா பணிகளை விட எப்படி வெளிநாட்டினரை ஏமாற்றி பணம் சேர்க்கலாம் என்பதே குறிக்கோளாகப் போய்விடும்.
  5. அரசாங்கத்தின் தேவையற்ற கெடுபிடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
  6. பண உதவி செய்யும் நிறுவனங்களின் கொள்கைக்கு எதிராக வாய்திறக்கக் கூடாது என்ற புதுப் பாலிசி எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
என்று கூறியுள்ளார். படிக்க;http://onlinepj.com/unarvuweekly/velinattil_uthavi_peruvathu_thavara/

நன்றாக கவனிக்க வேண்டும். இந்த ஆறு அம்சங்களில் ஒன்று கூட குர்'ஆன் ஹதீஸில் சொல்லப்பட்டதல்ல. இவரது கற்பனையில் உதித்தவையே. வெளிநாட்டு அரசிடமிருந்தோ, நிறுவனங்களிடமிருந்தோ பணம் பெறுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது அல்ல எனும் போது, தானாக ஒரு தடைபோட்டுக் கொண்டதோடு, வெளிநாட்டு நிதி உதவி பெற்று பல்வேறு நலப்பணிகளை செய்துவரும் அமைப்புகளையும் அறிஞர்களையும் வெளிநாட்டு சல்லிக்காக மாரடிப்பவர்கள் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார் அறிஞர் பீஜே. வெளிநாட்டு நிதி பெறும் விசயத்தில் பீஜேயின் அன்றைய நிலை என்ன என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா;

கேள்வி; சவூதியிலிருந்து உங்களுக்குப் பணம் வருகிறது என்று குராபிகள் கூறி வந்தனர்.அவர்களுக்குத்தான் பணம் வருகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நல்ல பணிகளுக்கு சவூதியிலிருந்து பணம் வந்தால் அதைப் பெறுவது தவறா?
-கே.எம்.ஏ.உமர், திசையன்விளை.

பதில்;நல்ல விசயத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள்[5 ;2 ] என்று அல்லாஹ் கூறுகின்றான். உதவலாம் என்பதில் பெறலாம் என்பதும் அடக்கம். சவூதியிலிருந்தோ வேறு எங்கிருந்தோ நல்ல காரியங்களுக்கு பணம் வந்தால் அதைப் பெறுவதில் எந்த தவறும் இல்லை. எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம். அல்ஜன்னத் ஜூன் 95

சவூதி மற்றும் எந்த பகுதியிலிருந்தும் பணம் பெறுவது சரியானதுதான் என்றும், எங்களுக்கு பணம் வரவில்லை என்பதால்தான் வரவில்லை என்கிறோமே தவிர வந்தால் பெற்றுக்கொள்வோம் என்று பீஜே அவர்கள் அன்று சொன்ன பதிலை நீங்கள் படித்தீர்கள். ஆனால் இன்று தான் மேற்கோள் காட்டிய குர்'ஆன் வசனத்திற்கு முரணாக வெளிநாட்டு நிதி பெற்றால் 'பின் விளைவுகள்' ஏற்படும் என்று தனது மனோஇச்சையை சட்டமாக்கிக் கொண்டு,மற்றவர்களையும் விமர்சிக்கிறார். கேட்டால் சொல்வார்; வெளிநாட்டு நிதி பெறுபவர்கள் அந்த நாட்டிற்கு ஏற்ப தாளம் போடுகிறார்கள் என்று. உண்மையில் அவ்வாறு ஏதேனும் தவறிழைத்தால் அந்த தவறை விமர்சிக்கலாம். தானும் சவூதி போன்ற நாடுகளில் பணம் பெற்று மற்றவர்களை விட சிறப்பான நலப்பணிகளை செய்து குறைகளற்ற கணக்கு வழக்குகளை கையாண்டு நன்மதிப்பை பெற பீஜே முயற்சிக்கலாம். வெளிநாட்டு நிதி பெறுபவர்கள் சில முறைகேடுகள் செய்கிறார்கள் எனவே நான் வாங்கமாட்டேன் என்றால், உள்நாட்டு வசூல் செய்பவர்களும் சில முறைகேடுகளை செய்கிறார்கள். அதற்காக உள்நாட்டு வசூலையும் பீஜே நிறுத்தி விடுவாரா? உள்நாட்டு மக்களிடம் வசூலித்து முறையாக கணக்கு வழக்குகளை நேர்மையாக கையாள்கிறேன் என்றும், தமிழகத்திலேயே கணக்கு வழக்குகளில் நேர்மையான ஜமாஅத் என்னுடையது தான் என்று பீஜே சொல்வது உண்மையானால் அதே நேர்மையை வெளிநாட்டு நிதியிலும் ஏன் கடைபிடிக்க முடியாது? சிலர் சில தவறுகளை செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அது போன்று ஆகிவிடுவோம் என்று பீஜே நினைப்பது அவரது தன்னம்பிக்கையின்மையை காட்டுகிறது. அன்றைக்கு அருள்மறை வசனத்தின் அடிப்படையில் பதிலளித்தவர் இன்று 'பாலிசி' பேசுகிறார் என்றால், பாலிசி என்ற ஒன்றை மூன்றாவது ஆதாரமாக பீஜே கொண்டிருக்கிறார் என்று சில சகோதரர்கள் சொல்வது உண்மையோ ஏன் எண்ணத்தோன்றுகிறது. அல்லாஹ் அவரையும் நம்மையும் பாதுகாப்பானாக!

வெள்ளி, 2 மார்ச், 2012

குர்'ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்; பீஜே அன்றும்-இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மார்க்கத்தை தூய வடிவில் சொல்லக் கிளம்பிய அறிஞர் பீஜே அவர்கள், தனது ஆய்வின் உச்சகட்டமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் சிலவற்றை பட்டியலிட்டு இவைகள் குர்'ஆனுடன் மோதுகின்றன என்றும், வேறு சில காரணங்கள் மற்றும் உவமானங்களை கூறி நிராகரிப்பதை அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்'ஆனோடு ஒரு போதும் மோதாது என்பதும், குர்'ஆனோடு முரண்படுவது போல் தோற்றமளித்தாலும் அந்த ஹதீஸை சரியான வகையில் விளங்க வேண்டுமே தவிர, ஹதீஸை ஒருபோதும் நிராகரிக்கக் கூடாது என்பதுதான் அறிஞர் பீஜேயின் முந்தைய நிலைப்பாடக இருந்தது. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பீஜெயிக்கு அன்று இருந்த உறுதியை அறிய பல ஆதாரங்கள் இருந்தாலும் குறிப்பாக ஒன்றைத் தருகிறோம்.

பிப்ரவரி 95அல்ஜன்னத் மாத இதழில், ''இணைவைக்கும் இமாமைப் பின்பற்றி தொழுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அறிஞர் பீஜே எடுத்து வைத்த ஹதீஸில் 'ஏனெனில் இமாம் உங்களுக்கும் உங்கள் இறைவனுக்கும் மத்தியில் தொடர்பாளர்களாக உள்ளனர்'' என்ற வரியும் உள்ளது. இதையொட்டி, முஹம்மது கஸ்ஸாலி என்ற சகோதரர் ஏப்ரல் 95 அல்ஜன்னத் இதழில் கேள்வி எழுப்புகிறார். அவர் தனது கேள்வியில், 'இமாம் நமக்கும் இறைவனுக்கும் தொடர்பாளராக உள்ளார் என்ற ஹதீஸை வெளியிட்டுள்ளீர்களே! இது புரோகிதத்தை காட்டவில்லையா? என்று கேட்க, அவருக்கு பதிலளித்த பீஜே, ''புரோகிதத்தைக் காட்டுகிறது என்று அந்த ஹதீஸை நிராகரிக்கவேண்டும் என்கிறீர்களா? புரோகிதத்தை காட்டாத வகையில் விளங்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு அடுத்து பீஜே சொல்வதை கவனியுங்கள். ''ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமனதாக இருக்கும் போது அதை நிராகரிக்க காரணங்களை தேடவேண்டாம்' என நேத்திய்யடியாக சொல்லி, ஹதீஸை குர்'ஆனுக்கு முரண்படாமல் விளங்க வேண்டுமே தவிர நிராகரிக்க கூடாது என்று ஆணித்தரமாக கூறுகிறார் அறிஞர் பீஜே.

பீஜேயின் இன்றைய நிலை என்ன? ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று அவரே ஒருபுறம் ஒப்புக்கொள்கிறார். மறுபுறம் அதை நிராகரிக்க அவரே காரணங்களை தேடுகிறாரா இல்லையா?  இறைவனுக்கும்-மனிதர்களுக்கும் இடைத்தரகர்களாக இமாம்கள் திகழ்கிறார்கள் என்ற பாரதூரமான அர்த்தம் தரும் ஹதீஸை கூட, புறக்கணிக்காமல்  பக்குவமாக விளங்கவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று எடுத்தேன் கவிழ்த்தேன் என ஹதீஸ்களை படுகுழியில் தள்ளுகிறாரா இல்லையா? குர்'ஆனுக்கு முரண்படுகிறது என்று இவராலும் இவரது தரப்பு அறிஞர்களாலும் கடும் ஆய்வுக்கு[!] பின் எழுதப்பட்ட ''ஹதீஸ்கள் குர்'ஆனுக்கு முரண்படுமா? என்ற நூலில் சில ஹதீஸ்களை பட்டியலிட்டு இவைகள் குர்'ஆனோடு மணிக்கு பல்லாயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதுவதால் குர்'ஆன் சேதமடையக் கூடும். எனவே இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அதை நிராக்ரிகக்வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தாரே! இதிலாவது பீஜெயால் உறுதியாக நிலைத்து நிற்க முடிந்ததா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.

மேற்கண்ட நூலில், குர்'ஆனுடன் மோதுவதாக மேற்கோள் காட்டப்பட்ட, பீஜெயாலும் அவர் தரப்பு அறிஞர்களாலும் பல மேடைகளில் முழங்கப்பட்ட ஹதீஸ் இன்று சரியான ஹதீஸாக 'ஞானஸ்தானம்' பெற்றுள்ளதை கீழே படியுங்கள்;

மிகச் சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் சொல்கிறோம்.

10. பயணத்தொழுகை

அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும் பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (350)

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது பிரயாணத்தொழுகை எந்த விதமான மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்து இரண்டு ரக்அத்தாகவே இருந்தது என்றக் கருத்தைத் தருகிறது. ஆனால் திருக்குர்ஆன் பயணத்தொழுகையைப் பற்றி பேசும்போது நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டு ரக்அத்துகளாக பயணத்தொழுகை சுருக்கப்பட்டது என்று கூறுகிறது.

நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக்கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.

அல்குர்ஆன் (4 : 101)

முழுமையான ஒன்றிலிருந்து தான் சுருக்கமுடியும். பயணத்தில் தொழுகையை சுருக்குவதாக இருந்தால் முதலில் நான்கு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்று சட்டம் இருந்திருக்க வேண்டும். இந்த நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டாக பயணத்தில் தொழுகை குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் பயணத்தொழுகையை குறிப்பிடும் போது நான்கிலிருந்து சுருக்கப்பட்டது என்று கூறாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்தே பயணத்தொழுகை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இரண்டுரக்அத்துகளாகவே இருப்பதைப் போன்று கூறியுள்ளார்கள். எனவே இவர்கள் கூறும் கருத்து குர்ஆனிற்கு முரண்பாடாக இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறினோம்.


இந்த ஹதீஸை சரிகாணுபவர்கள் இதற்கு கூறிய விளக்கத்தையும் நாம் ஆராய்ந்ததன் மூலம் கிடைத்த விளக்கத்தையும் வைத்துப் பார்த்தால் இந்த ஹதீஸை முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இவர்கள் கூறும் விளக்கத்திற்கு முறையான ஆதாரங்கள் இருப்பதால் இந்த விளக்கத்தை நாம் ஏற்றுத் தான் ஆகவேண்டும்.

சத்தியத்தை தெரிவது தான் நம்முடைய நோக்கமே தவிர நாம் கூறிய கருத்துக்களை எப்படியாவது சரிகாண வேண்டும் என்று நாம் பிடிவாதம் பிடிக்கமாட்டோம். எனவே ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை பின்வரும் முறையில் முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழும் போது கடமையானத் தொழுகை இரண்டு ரக்அத்துகளாக இருந்தது. மதீனாவிற்கு அவர்கள் வந்தவுடன் நான்கு ரக்அத்துகளாக மாற்றப்பட்டது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(மக்காவில்) தொழுகை இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பின் நான்கு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. மேலும் பிரயாணத் தொழுகை மட்டும் முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறே (இரண்டு ரக்அத்தாகவே இருக்கட்டுமென்று) விட்டுவிடப்பட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (3935)

மதீனாவிற்கு வருவதற்கு முன்பு மக்காவில் இரண்டு ரக்அத்துதான் கடமையாக்கப்பட்டிருந்தது என்றக் கருத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் சொல்லவில்லை. அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்களும் இந்தக் கருத்தை கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை லுஹர் தொழுகையை இரண்டு இரண்டாகத் தான் தொழுதுவந்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி)

நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான் பாகம் : 6 பக்கம் : 143

தொழுகையை இரண்டாக சுருக்கிக் கொள்ளுவதற்கு அனுமதியளிக்கும் வசனம் மதீனாவில் இறங்கியது என்றக் கருத்தை இப்னுல் அசீர் தவ்லாபீ மற்றும் சுஹைலீ போன்ற அறிஞர்கள் பதிவுசெய்துள்ளார்கள் .

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த உடன் தொழுகை நான்காக மாற்றப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் இரண்டு ரக்அத்தை சுருக்கிக்கொள்ளலாம் என்று வசனம் இறங்கியது. இதனால் ஊரில் நான்கு ரக்அத்துகளாகவும் பிரயாணத்தில் இரண்டு ரக்அத் தொழுகவும் கடமையாக்கப்பட்டது. இறுதியில் முடிவாக்கப்பட்ட இந்த நிலையைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் முரண்பாடு வராது.

தொழுகை நான்கு ரக்அத்துகளாக மாற்றப்ட்டது. பின்பு வசனம் இறங்கியதால் இரண்டாக குறைக்கப்பட்டது என்ற விளக்கம் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் இல்லாததால் அது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறினோம். ஆனால் இந்த விளக்கம் வேறு ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகிவிட்டதால் முரண்பாடு எதுவும் இல்லாமல் இதை விளங்கிக்கொள்ள முடியும்.

முதலில் இரண்டு ரக்அத் கடமையாக இருந்தது. மதீனாவிற்கு வந்த உடன் நான்காக மாற்றப்பட்டதால் முன்பிருந்த தொழுகையை விட இரண்டு ரக்அத் அதிகமாக்கப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் குறைத்துக்கொள்ளும் படி வசனம் இறங்கியதால் மதீனாவில் இருக்கும் போது பயணத்தில் இரண்டு ரக்அத் தொழவேண்டும் என்ற பழைய சட்டம் இறுதியாக அப்படியே வைக்கப்பட்டுவிட்டது என்பதே ஆயிஷா (ரலி) அவர்களுடைய கூற்றின் விளக்கம்.

முரண்பாடு நீங்கிவிட்டதால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளலாம். 

காய்தல் உவத்தல் இன்றி நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! புகாரியில் இடம்பெற்ற அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் ஒரு ஹதீஸை எடுத்து வைத்து, இந்த ஹதீஸ் அதாரப்பூர்வமனதுதான்; ஆனாலும் குர்'ஆனோடு மோதுகிறது. எனவே இந்த ஹதீஸை நபி[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள். எனவே இதை நிராகரிக்கக் வேண்டும் என்று சொல்லியதன் மூலம், நபியவர்கள் சொன்ன செய்தியை அவர்கள் சொல்லவில்லை என்றும், அன்னை ஆயிஷா அவர்கள் நபியவர்கள் சொல்லாத ஒன்றை இட்டுக்கட்டி விட்டார்கள் என்றும், நபியவர்கள் சொல்லாத ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் தெரியாமல் நற்சான்று வழங்கி விட்டார்கள் என்றும், நபியவர்கள் சொல்லாத ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று இமாம் புகாரி அவர்கள் அறியாமையினால் பதிவு செய்துவிட்டார் என்றும் நினைக்கும் அளவுக்கு இவர்களின் இந்த 'ஹதீஸ் நிராகரிப்பு' காட்டியதே!

இன்றைக்கு அதே புஹாரியில் இடம்பெறுள்ள அதே அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கக்கூடிய வேறு ஒரு ஹதீஸை கொண்டுவந்து போட்டு, முன்னர் தாங்கள் நிராகரித்த ஹதீஸை இன்று சரிகான்கிறார்கள் என்றால், புஹாரியைக் கூட இவர்கள் முழுமையாக படிக்காமல் ஹதீஸ்களை நிராகரிக்கும் போடுபோக்குடையவர்கள் என்று விளங்குகிறதா? அதோடு இவர்களின் இன்னொரு கருத்தையும் இங்கே கவனிக்கக் வேண்டும். இவர்களின் இந்த ஹதீஸ் நிராகரிப்பைக் கண்ட யாரோ ஒரு சிலர், பீஜெயிக்கு இந்த ஹதீஸ் குறித்து அளித்த விளக்கம் ஏற்புடையதாக இருந்ததாக கூறுகிறார். அப்படியானால் இவருக்கு விளங்காத ஒன்று வேறு யாருக்கேனும் விளங்கக் கூடும் அல்லவா? அப்படியானால் இவர் செய்யவேண்டியது என்ன? எந்த ஹதீஸ் குர்'ஆனுக்கும்-வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் முரண்படுவதாக இவருக்கு தோன்றுகிறதோ, அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என தூக்கி விசாமல், அந்த ஹதீஸின் நிலை குறித்து தனது தரப்பு அறிஞர்கள் மட்டுமல்லாது மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள், உலக ரீதியில் உள்ள சிறந்த அறிஞர்கள் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்று விளக்கம் கானுவதுதானே இவர் செய்ய வேண்டியது. அதை விடுத்து தனது கருத்துக்கு ஒத்த கருத்துடைய சிலரோடு மட்டும் ஆலோசித்து ஹதீஸ்களை நிராகரித்தால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதோடு, இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என நம்பும் ஒரு சாராருக்கு தவறான வழிகாட்டியமைக்கும் பீஜே பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். 

அடுத்து, மேற்கண்ட ஹதீஸை நிராகரிப்பதில் இவரும், இவர் தரப்பு அறிஞர்களும் காட்டிய வேகத்தை இன்று ஹதீஸை சரி கண்ட பின்னால் மக்களிடம் அதே வேகத்தோடு கொண்டு போய் சேர்க்கவில்லையே? கேட்டால் சொல்லுவார். நான் இணையதளத்தில் திருத்தி விட்டேனே என்று. இவர் இணையதளத்தில் சத்தமின்றி திருத்தியது எத்தனை பேருக்குத் தெரியும்? மார்க்க விசயத்தில் முன்னர் சொன்ன ஒரு கருத்தை மாற்றுவதாக இருந்தால் அதை பகிரங்கமாக அறிவிப்பதுதான் முறை. ஏதேதோ வெட்டியான செய்திகளுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து 'பிளாஸ் நியூஸ்' போடும் இவர் உயிரினும் மேலான தூதரின் ஒரு சொல்லை நேற்று மறுத்தேன்; அது தவறு. அது சரியான சொல்தான் என்று இவரது அத்தனை மீடியாக்கள் மட்டுமன்றி, இவரது மார்க்கஸ்களில் அறிவிப்புப் பலகை வைத்து எழுதுவதோடு, இவரது மற்றும் இவர் தரப்பு பேச்சாளர்களின் நிகழ்ச்சியிலும் அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து சத்தமின்றி நூலை உருவுவதுபோன்று 'நூலில்' இருந்து வார்த்தைகளை உருவுவதால் எந்த பலனுமலில்லை என்பதை பீஜே தெரிந்து கொள்ளட்டும்.