அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 18 ஜூன், 2009

எங்கே எமது அடையாளம்..?

حَدَّثَنَا ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏‏قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَا تَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قَالَ فَكَبَّرْنَا ثُمَّ قَالَ أَمَا تَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قَالَ فَكَبَّرْنَا ثُمَّ قَالَ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ وَسَأُخْبِرُكُمْ عَنْ ذَلِكَ مَا الْمُسْلِمُونَ فِي الْكُفَّارِ إِلَّا كَشَعْرَةٍ بَيْضَاءَ فِي ثَوْرٍ أَسْوَدَ أَوْ كَشَعْرَةٍ سَوْدَاءَ فِي ثَوْرٍ أَبْيَضَ ‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு, "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?" என்று கேட்டார்கள். அப்போதும் நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு, "சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (எனது சமுதாயத்தவர்) இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கிறேன். அதைப் பற்றி (ஓர் உவமை) உங்களுக்குத் தெரிவிக்கிறேன்: இறைமறுப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் கறுப்புக்காளை மாட்டி(ன் உடலி)லுள்ள வெள்ளை முடியைப் போன்று - அல்லது - வெள்ளைக்காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவர்)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). [நூல்;முஸ்லிம் ஹதீஸ் எண்: 324

ஹதீஸ் எண்: 325 வது செய்தியில், இணைவைப்பாளர்களுடன் ஒப்பிடும் போது என்றும், ஹதீஸ் எண்: 326 வது செய்தியில், மற்ற சமுதாயங்களுடன் ஒப்பிடும் போது என்றும் இடம்பெற்றுள்ளது.

மேற்கண்ட நபிமொழியில் ஒரு முஸ்லிம் தனித்து விளங்கவேண்டும் என்பதை நபியவர்கள் உதாரணத்தோடு குறிப்பிடுகிறார்கள் . அதாவது முழுக்க-முழுக்க வெள்ளை நிறத்திலான காளை மாட்டில் ஒரே ஒரு கருப்பு முடி இருந்தால் எவ்வாறு தனித்து பளிச்சென்று தென்படுமோ அதுபோன்று, ஒரு முஸ்லிமை பார்த்தால் அவரைப்பற்றி விசாரிக்காமலேயே அவர் முஸ்லிம்தான் என்று அடையாளம் காணும் வகையில் இருக்கவேண்டும். முஸ்லிம் என்பதன் அடையாளமாக பல விஷயங்கள் மார்க்கத்தில் கூறப்பட்டிருந்தாலும், தோற்றத்தில் ஒன்றையும், அமலில் ஒன்றையும் இந்த ஆக்கத்தில் மேற்கோள் காட்டுகிறோம்.

தொழுகை;


حَدَّثَنَا ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكُ الصَّلَاةِ
"நிச்சயமாக ஒருவரது இணைவைப்புக்கும் இறைமறுப்புக்கும் அடையாளம் என்பது தொழுகையைக் கைவிடுவதுதான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).[முஸ்லிம் ஹதீஸ் எண்: 117

நான் ஒரு முஸ்லிம். இனைவைப்பிலோ, அல்லது இறை மறுப்பிலோ எனக்கு உடன்பாடில்லை என்று அடையாளம் காட்டுவது தொழுகை மூலமாகத்தான். எப்படி எனில், ஒரு முஸ்லிமல்லாதவருடன் நாம் அளவளாவிக்கொண்டிருக்கையில், அருகில் உள்ள பள்ளியில் இருந்து அல்லாஹ்வை வணங்க அதான் எனும் அழைப்பு விடுக்கப்பட்டவுடன், நாம் பள்ளியை நோக்கி சென்றால் அங்கே நாம் முஸ்லிம் என அடையாளப்படுத்துகிறோம். அல்லது பாங்கின் ஓசையை கேட்டும்' எதன் மீதோ மழை பெய்தது' போன்று நாம் அரட்டை கச்சேரியை தொடர்ந்தால் அந்த இடத்தில் முஸ்லிமல்லாதவருக்கும்-நமக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இன்று முஸ்லிம்களில் தொழாதவர்களின் எண்ணிக்கைதான் பெரும்பான்மையாக உள்ளது. எனவே பெயரை அரபியில் வைத்துக்கொள்வதால் மட்டுமே ஒருவர் முஸ்லிமாகிவிட முடியாது. இறை மறுப்பாளர்கள் மற்றும் இனைவைப்பாளர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் தொழுகையை நிறைவேற்றாதவரை இவர்களும் அவர்களை சார்ந்தவர்களே.

தாடி;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். [நூல்;buhaari எண் 5892]

தாடி வளர்ப்பது நபியவர்களின் வழிமுறையாகவும், இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யக்கூடியதாகவும், முஸ்லிமின் அடையாளமாகவும் திகழ்கிறது. நபி[ஸல்] அவர்கள் மட்டுமன்றி, பெரும்பாலான சகாபாக்களும் தாடி வைத்திருந்ததாக ஹதீஸ்களில் காணமுடிகிறது .ஆனால் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம்மில் பெரும்பாலோர் தாடி வைப்பதில்லை. மேலும், தாடி வைத்திருக்கும் சொற்பமான நபர்களை, 'ஏண்டா பரதேசி மாதிரி தாடி வளத்துக்கிட்டு அலையுற' என்று ஏளனமாக கேலி செய்பவர்களும் சமுதாயத்தில் உண்டு. வெள்ளிக்கிழமை மட்டும் முஸ்லிமாக மாறும்[ஜூம்மா மட்டும் தொழுபவர்கள்] இவர்கள், ஜூம்மா தொழுகைக்கு செல்லும் முன்பு அந்த வாரத்தில் வளர்ந்த சுன்னத்தான தாடியை மழுங்க சிறைத்து விட்டே பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது போக ஒரு காலத்தில் கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேரத்தில் தாடி வைத்தவர்களை போலிஸ் சந்தேக கண் கொண்டு பார்த்தபோது அதற்கு பயந்து தாடியை எடுத்தவர்களும் உண்டு. தனது அபிமான அரசியல் தலைவர்கள் /நடிகர்களின் மேனரிசத்தை கடைபிடிப்பதில் ஆர்வம் காட்டும் முஸ்லிம்களில் சிலர் நமது உயிரினும் மேலான தலைவர் நபி[ஸல்] அவர்களின் வழிமுறையான தாடி வளர்ப்பதை கடைபிடிப்பதில்லை. எனவே நாம் சுட்டிக்காட்டியவைகள் மட்டுமன்றி, நம்முடைய அன்றாட வாழ்க்கை தொடங்கி, திருமணம் வியாபாரம் பழக்க வழக்கங்கள் இப்படி எல்லாவற்றிலும் நாம் 'முஸ்லிம்' என்ற தனித்துவத்தை நிலைநாட்ட முன்வரவேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை முஸ்லிம்களாக வாழ்ந்து, முஸ்லிம்களாகவே மரணிக்க செய்வானாக!

கருத்துகள் இல்லை: