அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

இமயத்தின் உச்சத்தில் இசைப்புயல்; ஒரு இஸ்லாமியப்பார்வை!


சகோதரர் ஏஆர். ரஹ்மான் அவர்கள் உலகின் மிகச்சிறந்த விருது எனக்கருதப்படும் ஆஸ்கார் விருதை வென்றதையடுத்து, நாட்டின் பெரும்தலைவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை வாழ்த்துமழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். சில இஸ்லாமிய சகோதரர்கள் கூட இச்செய்திக்கு முன்னிலை கொடுத்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ரஹ்மான் விருதுபெற்றதையடுத்து நாகூர் தர்காவில் சிலர் சிறப்பு பிரார்த்தனை நடத்தியதாகவும் செய்திகள் கூறுகின்றது.

சகோதரர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் பிறமதத்தில் பிறந்திருந்தாலும் அவர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர். அந்தவகையில் பரம்பரை முஸ்லிம்களை விட அவர் சிறந்தவர். அந்தவகையில் அவர்மீது நமக்கு உயர்வான மதிப்பு எப்போதும் உண்டு. அதே நேரத்தில் அவர் சார்ந்துள்ள இசைத்துறை இஸ்லாம் தடுத்த ஒருதுறையாகும். மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒருதுறையில் ஒருமுஸ்லீம் வெற்றிபெற்றால் அதை ஏனைய முஸ்லிம்கள் ஊக்குவிப்பதோ, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோ கூடாது.

இசை பற்றி இஸ்லாம் ;

அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் 'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)


நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
நூல்;புஹாரி,எண் 5590

இறைத்தூதர்[ஸல்] அவர்களால் கண்டிக்கப்பட்ட ஒரு செயலை இன்று முஸ்லிம்களில் சிலர் செய்வதையும், சிலர் அந்த இசையில் மயங்குவதையும், சிலர் ஆதரிப்பதையும் பார்க்கிறோம். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் ஒரு பிரபல மவுலவி இசைக்கு வித்தியாசமான விளக்கம் கொடுக்கிறார். அதாவது ஒரு கருவியின் மூலம் இசைப்பது ஹராம் இல்லையாம், பல கருவிகள் கொண்டு இசைப்பதுதான் ஹராமாம். என்ன விந்தை பாருங்கள்; ஒரே ஒரு கீபோர்டை கொண்டு எத்துனையோ வகையான இசையை வெளிப்படுத்தலாமே! அப்படியானால் அது ஹலாலாகிவிடுமா? இப்படிப்பட்டவர்களைத்தான் மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் சொல்லியிருப்பார்களோ?

எனவே சகோதர்களே/சகோதரிகளே! இசை மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகளை சமர்பிக்கமுடியும். படிப்பவர்களின் நேரம்கருதி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப ஒரே ஒரு ஆதாரம் மட்டும் சமர்பித்துள்ளோம். ஷைத்தானின் மாயவலையான இசையிலிருந்து நம் சமுதாயத்தை அல்லாஹ் காப்பானாக!

சனி, 14 பிப்ரவரி, 2009

பெருகிவரும் தனிப்பள்ளிகளும் அருகிவரும் ஒற்றுமையும்[பாகம் 2]

தமிழகத்தில் அமைப்புக்கொரு பள்ளிவாசல் எழுப்பப்படுவதை பற்றிய தொடரின் இறுதிப்பகுதி; தனிப்பள்ளியை சரிகான்பவர்கள், பித்'அத் அரங்கேறும் பள்ளிவாசலில் எங்களை தொழ சொல்கிறீர்களா ? என்ற கேள்வியை வைக்கிறார்கள். பித்'அத் அரங்கேறுவதால் ஒரு பள்ளி தொழுவதற்கு தகுதியற்றதாக ஆகிவிட்டது. எனவே, தனிப்பள்ளியே தீர்வு எனில், புனித மக்காவிலும்- புனித மதீனாவிலும் உள்ள காபா மற்றும் மஸ்ஜிதுன்நபவியில், ஜும்மாவிற்கு இருபாங்குகள், தராவீக் இருபத்து ரக்'அத்துகள் போன்ற பித்'அத்கள் அரங்கேறுகிறது. அப்படியாயின் அந்த இரு புனிதபள்ளிகளும் தொழுவதற்கான தகுதியை இழந்துவிட்டது என கூறவருவார்களா? [அஸ்தஃபிருல்லாஹ்] இரு புனித பள்ளிகளும் தகுதியிழந்து விட்டதால், இந்த 'தனிப்பள்ளிவாதிகள்' அங்கேயும் தனிப்பள்ளி எழுப்புவார்களா? 'தனிப்பள்ளிவாதிகள்' ஹஜ்- அல்லது உம்ரா சென்றால் இந்த பித்'அத்அரங்கேறும் பள்ளியில் தொழுவார்களா? அல்லது வேறு எங்காவது தொழுவார்களா? என்ற கேள்விக்கு பதிளில்லை.

அடுத்து, சு.ஜ. பள்ளிகளில்தான் நபிவழிப்படி தொழுவதை தடுக்கிறார்கள் என்றுவாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், ஒரு ஊரில் நபிவழிப்படி தொழ அனுமதிக்கும் பள்ளியிருக்கும்போது, அமைப்புக்கொரு பள்ளி ஏன்? என்ற கேள்விக்கும் பதிளில்லை. சரி! சு.ஜ. பள்ளிகளில் தவ்கீத்வாதிகளை தடுப்பது ஏன் என்பதை பார்ப்போம்.

முதலாவது தவ்ஹீதுவாதிகள் உள்ளத்தில், நாம் தொழும் முறைதான் நபிவழிமுறையில் உள்ளது. மற்றவர்கள் தொழுவதெல்லாம் அவர்களாக உருவாக்கிக்கொண்டு தொழும்முறை. என்று ஒரு அழுத்தமான எண்ணம் பதியவைக்கப்பட்டுள்ளது. தவ்ஹீத்வாதிகளுக்கும் சு.ஜ. வாதிகளுக்கும் தொழுகையில் பிரதானமான பிரச்சினை வருவது பெரும்பாலும் மூன்று விசயங்களில்தான். 1. தொப்பி 2. ஆமீன் சொல்லுதல் 3.விரலசைத்தல். இந்த மூன்று விசயங்களில் மத்ஹப்வாதிகள் தவறான வழியில் இருக்கிறார்களா? அல்லது அவர்களது செயலுக்கும் ஆதாரம் உள்ளதா என்பதை பார்ப்போம்.
தொப்பி;
தொப்பி போடுவதை கண்டிப்புடன் வலியுறுத்துவதற்கு எப்படி வலுவான ஆதாரமில்லையோ அதுபோல தொப்பி போடக்கூடாது என்று தடையேதுமில்லை என்பதை தவ்ஹீத்அறிஞர்கள் ஒப்புக்கொண்ட விசயம்தான். அதே நேரத்தில் தொப்பி அணிவதற்கு நெருக்கமான ஆதாரங்கள் இருப்பதை காணலாம்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இஹ்ராம் அணிந்தவர் எத்தகைய ஆடைகளை அணியலாம் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'சட்டை, தலைப்பாகை, கால்சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் தோய்ந்த ஆடை, வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது! செருப்பு கிடைக்காதவர்கள் காலுறைகளை அணியலாம். ஆயினும் கரண்டைக்குக் கீழே இருக்கும்படி (மேலிருந்து கரண்டைக்குக் கீழ் வரை) அவற்றை வெட்டி விட வேண்டும்!" என்று விடையளித்தார்கள். நூல்;புஹாரி,எண் 1842

இந்த செய்தயில் இஹ்ராம் அணியும்போது தவிர்க்கவேண்டிய ஆடைகள் பட்டியலில் நபி[ஸல்] அவர்கள், தொப்பியையும் குறிப்பிடுவதால் தொப்பி அணிந்துவரும் நடைமுரையிருந்திருக்கிறதுஎனவேதான் இஹ்ராமின்போது அதை நபியவர்கள் தடுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கமுடியும்.
அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்;
உமர்(ரலி) குத்தப்பட்ட நாளில் அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமா(ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர்(ரலி) (மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்கு முன்) இரண்டு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் (மக்களை நோக்கி), 'சீராக நில்லுங்கள்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்கிடையே சீர் குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் 'யூசுஃப்' அத்தியாயம் அல்லது 'நஹ்ல்' அத்தியாயம் அல்லது அது போன்ற (வேறோர் அத்தியாயத்)தை, மக்கள் தொழுகை;காக வந்து சேரும் வரையில் முதல் ரக்அத்தில் ஓதுவார்கள். (சம்பவ தினத்தன்று) அப்போது நான் தக்பீர் கூறியிருப்பாக்hள். 'என்னை நாய் கொன்றுவிட்டது... அல்லது தின்றுவிட்டது..." என்று கூறினார்கள். (அப்போது 'அபூ லுஸலுஆ ஃபைரோஸ்' என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்). உடனே, அந்த 'இல்ஜ்' (அரபில்லாத அந்நிய மொழி பேசும் இறைமறுப்பாளன்) தன்னுடைய பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தன்னுடைய வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந்தோடலானான். முடிவாக, பதின்மூன்று ஆண்களை அவன் குத்தி வட்டிருந்தான். அதில் ஏழுபேர் இறந்துவிட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தம் நீண்ட தொப்பியை (கழற்றி) அவன் மீது வீசி எறிந்தார். [ஹதீஸ் சுருக்கம்]
நூல்;புஹாரி;எண் 3700

இந்த செய்தியில் தொழுகையில் உமர்[ரலி] அவர்களுக்கு பின்னால் தொழுகையில் அணிவகுத்திருந்த ஒருவர் தனது தொப்பியை கழற்றி வீசிஎறிந்தார் என்பதை பார்க்கும்போது தொழுகையில் தொப்பியணிவது நடைமுறையில் இருந்துள்ளதை காணலாம். தொப்பியின் வகை மாறுபட்டாலும் தொப்பி இருந்துள்ளது என்பதற்காக இதை குறிப்பிடுகிறோம். மேலும், இதை ஆதாரமாக கொள்ளமாட்டோம் என்று தவ்ஹீத்வாதிகள் மறுத்தால்கூட, பிரச்சினை விசயத்தில் எதுஎதற்கோ சமரசம் காணும்போது, ஒற்றுமை நாடி தொப்பியணிந்தால் என்ன பாதிப்பு வந்துவிடும்?
ஆமீன்;
நபி[ஸல்] அவர்கள் ஆமீன் சொல்லச்சொன்னார்கள் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் நபி[ஸல்]அவர்கள் பள்ளிவாசல் அதிரும் அளவுக்கு ஆமீன் சொல்லவில்லை. முதல்வரிசைக்கு கேட்குமளவுக்குதான் சொல்லியுள்ளார்கள். அவர்களை பின்தொடர்ந்து சகாபாக்கள் தொழும்போது பள்ளிவாசல் அதிரும் அளவுக்கு ஆமீன் சொல்லியதாக ஆதாரமுண்டா? நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் சகாபாக்கள் தங்களுக்கு மத்தியில் தொழும்போது பள்ளிவாசல் அதிரும் அளவுக்கு ஆமீன் சொன்னதாக ஹதீஸ் உள்ளது. நபிவழியை பின்பற்றுவதாக இருந்தால் மிதமாக முன்வரிசை கேட்குமளவுக்கு ஆமீன் சொல்வதுதானே முறை. சகாபாக்களை பின்பற்றமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு சகாபாக்கள் வழிமுறையில் ஆமீன் என அலறுவது ஏன்? அதே நேரத்தில் ஆமீன் சொல்வதை பள்ளிவாசல் நிர்வாகிகள் தடுப்பது அப்பட்டமான வரம்புமீரலாகும்.
விரலசைத்தல்;
விரலசைக்காமல் இருப்பதற்கும் ஹதீஸ் உள்ளதை பாருங்கள்;
ஆசிம் இப்னு குலைபில் அல்ஜர்மி அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி[ஸல்]அவர்கள் தொழுது கொண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அப்போதுஅவர்கள் தமது இடதுகையை இடதுதொடையின்மீதும், வலதுகையை வலதுதொடைமீதும் வைத்திருந்தார்கள்.மேலும் தமது வலதுகை விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலை நீட்டிவைத்துகொண்டு 'இதயங்களை புரட்டுபவனே என்னுடய இதயத்தை உனது மார்க்கத்தில் நிலைப்படுத்துவாயாக' என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
நூல்;திர்மிதி, 3511


இந்த ஹதீஸை சு.ஜ. பள்ளியில் அமுல்படுத்தினால் ஏன் பிரச்சினை வருகிறது? இரு ஹதீஸ்கள் இருக்கும்போது ஒரு ஹதீசைமட்டும்தான் அமுல்படுத்துவோம் என்று பிடிவாதம் பிடிப்பது ஏன்? எனவே, தொழுகை விசயத்தில் சு.ஜ.வினர் சில மஸாயில்களில் அறியாமையிளிருந்தால் பக்குவமாக எடுத்துச்சொல்லி நாளடைவில்தான் சரிசெய்யமுடியுமேயன்றி, எடுத்தேன்-கவிழ்த்தேன் என்று தனிப்பள்ளி காண்பது சரியல்ல.


புதன், 11 பிப்ரவரி, 2009

பெருகிவரும் தனிப்பள்ளிகளும்- அருகிவரும் ஒற்றுமையும்! [பாகம் 1]


தமிழகத்தில் ஒருகாலத்தில் ஒரு ஊருக்குசென்றால் அங்கே பெரும்பாலும் ஹனபி மத்ஹபை அடிப்படையாக கொண்ட பள்ளி ஒன்று இருக்கும். அவ்வூரில் ஷாபிமத்ஹப்பினர் கணிசமாக இருந்தால் அவர்கள் ஒரு பள்ளியை எழுப்பியிருப்பார்கள். ஷாபியாக்கள் விரல்விட்டு என்னுமளவுக்குதான் அவ்வூரில் இருந்தால் அவர்கள் வித்ரு தொழுகை நீங்கலாக ஏனைய தொழுகைகளை ஹனபிஜமாத்துடன் தொழுது கொள்வார்கள். அத்திப்பூத்தார்போல் சிலபகுதிகளில் அஹ்லே ஹதீஸ் பள்ளிகளும் இருந்தன.

இன்றைய நிலைஎன்ன? ஹனபி பள்ளி, ஷாபி பள்ளி- அஹ்லே ஹதீஸ்பள்ளி- ஜாக்பள்ளி- த.த.ஜ. பள்ளி, த.மு.மு.க. பள்ளி, இ.த.ஜ. பள்ளி இப்படி ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒருபள்ளிஎன்ற அளவுக்கு பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி ஆளுக்கொரு பள்ளிவாசல் கட்டிக்கொள்வது பற்றி மார்க்கஅடிப்படையில் கேள்வி எழுப்பினால்,

* ஹனபி-ஷாபி பள்ளிகளில் தவ்ஹீத்வாதிகளை நபிவழிப்படி தொழ அனுமதிப்பதில்லை.

*இப்பள்ளிவாசலில் மவ்லித்போன்ற பித்அத்கள் அரங்கேறுகிறது.என்பன போன்ற குற்றச்சாட்டுகள் தனிப்பள்ளி காண்பவர்களால் முன்வைக்கப்படுகிறது.

நபி[ஸல்]அவர்கள் மக்காவில் இருந்தபோது காபாவின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம். நபியவர்கள் மக்காவெற்றியின்போது முன்னூற்றி அறுபது சிலைகளை அப்புறப்படுத்தியதையும் நாமறிவோம். முழுக்க,முழுக்க சிலைகளால் நிரம்பியிருந்த மார்க்கம் காட்ட்டிதராத சீட்டியடித்தல், நிர்வாணமாக தவாப் செய்தல், போன்ற செயல்களை குறைஷிகள் அப்புனித வீட்டில் செய்துவந்த நிலையில், நபி[ஸல்]அவர்கள் மக்காவில் இருந்தவரைக்கும் காபாவில்தானே தொழுதார்கள். தனிப்பள்ளி எழுப்பவில்லையே? இன்றைக்குள்ள மத்ஹப்பள்ளிகளில் எந்த பள்ளியில் சிலையிருக்கிறது? எந்த பள்ளியில் சீட்டியடிக்கப்படுகிறது? எந்தபள்ளியில் அவலட்சணமான ஆடை அணிந்து தொழுகை நடைபெறுகிறது? ஆக தனிப்பள்ளி கட்டுவதற்கு பித்அத்கள் அரங்கேறுகிறது என்ற காரணம் ஏற்புடையதன்று.

ஒருவாதத்திற்காக, நபிவழிப்படி தொழுவதற்காக தனிப்பள்ளி எழுப்புதல் என்பதை சரிகன்டால் கூட, அஹ்லேஹதீஸ் பள்ளிவாசலோடு நிறுத்தப்பட்டிருக்கவேண்டும்.

*நபிவழியில் தொழஅனுமதிக்கும் அஹ்லே ஹதீஸ் பள்ளியிருக்கும் ஊரில் ஜாக் பள்ளி எதற்கு?

*நபிவழியில் தொழ அனுமதிக்கும் ஜாக்பள்ளி இருக்கும் ஊரில் த.மு.மு.க.பள்ளி எதற்கு?

*நபிவழியில் தொழ அனுமதிக்கும் த.மு.மு.க.பள்ளி இருக்கும் ஊரில் த.த.ஜ.பள்ளி எதற்கு?

*நபிவழியில் தொழ அனுமதிக்கும் த.த.ஜ.பள்ளி இருக்கும் ஊரில் இ.த.ஜ. பள்ளி எதற்கு?

இப்படி அமைப்புக்கொரு பள்ளி கட்டியதிலிருந்தே, நபிவழி தொழுவது மட்டும் நோக்கமல்ல. என்பதை புரிந்து கொள்ளலாம்.

மேலும், சில அமைப்புகள் தங்கள் கிளை/மாவட்ட/மாநில அலுவலகங்களில் தொழுகை நடத்துவதையும் பார்க்கிறோம். பள்ளிவாசலுக்கு செல்லாமல் இப்படி அலுவலகத்திலே தொழுகை நடத்துவது சரியா என்றால்? அதற்கு ஒரு ஆதாரம் காட்டப்படும். 'மஸ்ஜிதுன் நபவிதான் நபியவர்களின் தொழும் பள்ளியாகவும், அரசியல்,போர் உள்ளிட்ட அத்துணை விசயங்களையும் அலசும் இடமாகவும் இருந்தது' என்பார்கள். ஆனால் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து/மறைத்து விடுவார்கள். அதாவது நபியவர்கள் தொழும் பள்ளிவாசலை ஏனைய பணிகளுக்கு பயன்படுத்தியது வேறு. பள்ளிவாசலுக்கு தொழ செல்லாமல் அலுவலகத்தையே பள்ளிவாசலாக நினைத்து தொழுவது என்பது வேறு.

எனவே, ஒரு ஊரில் ஒருபள்ளிவாசல் இருக்கும்நிலையில், அப்பள்ளி தொழவரும் மக்களுக்கு போதுமானதாக இல்லையெனில் அதை விரிவுபடுத்தலாம். அல்லது கூடுதல் பள்ளிகளை எழுப்பிக்கொள்ளலாம். பள்ளியிலிருந்து வெகுதொலைவில் உள்ளமக்கள் வக்துக்கு வரமுடியாத நிலையிருந்தால் விரும்பினால்,கூடுதல் பள்ளிகளை எழுப்பலாம்.[அழகான முறையில் ஒழுசெய்து தொழுகைக்காக பள்ளியை நோக்கி நடந்துவந்தால் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்ற நபிமொழியும் உண்டு] வேறு எதற்காகவும் பள்ளிவாசலை கட்டிக்கொண்டு பிரிவதற்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை.

தொடரும்...

புதன், 4 பிப்ரவரி, 2009

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்!

ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கானபாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில்எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக விடிவதற்கு இன்னும் நேரம்இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு என்றான்.தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே என்றேன். அதற்கு ஷைத்தான் நான்அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப்போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்துகொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ மறந்தால் வீட்டில் தனியாகதொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்க்கம்இலேசானது. அதை கடினமாக்கி விடாதே! என்றான்.

அவன் பேச்சில் மயங்கி உறங்கிவிட்டேன். சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன். அப்பொழுதுஷைத்தான் எதிரில் வந்து வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள்இருக்கிறது என்றான்.நான் தௌபா செய்ய நாடினேன். உடனே ஷைத்தான் உன் இளமைப் பருவம் முடியுமுன்அதை முழுமையாக அனுபவி என்றான். நான் மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்என்றேன். அதற்கவன் பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது முடிவடையாதுஎன்றான்.

நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில்உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான். நான்அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய் என்றேன். இல்லை, இல்லை. நீ இரவுபடுக்குமுன் துஆ செய்யலாமே என்றான்.நான் உம்ரா செல்ல நாடியுள்ளேன என்றேன்.நல்லது. ஆனால், சுன்னத்தை விட பர்ளுதானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய என்றான்.நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் நீ ஏன் பாடல், கவிதைகளை பாடிஉன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்? என்றான். நான் பாடல் பாடி கூப்பாடுபோடுவது ஹராம் என்றேன். உடனே அவன் மார்க்க மேதைகளிடையே இசை, பாடல்குறித்து கருத்து வேற்றுமை உள்ளது என்றான். இசையை ஹராம் என்று கூறும்ஹதீஸ்களை நான் படித்துள்ளேன் என்றேன். உடனே அவன் அந்த ஹதீஸ்களின்அறிவிப்பாளர்கள் வரிசை பலஹீனமானது என்றான்.

அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என்பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். உடனே அவன் என்ன வெட்கப்படுகிறாய்?முதல் பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே! என்றான். அந்நியப் பெண்ணை பார்ப்பதுநரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன என்றேன். அவன் சிரித்து விட்டு இயற்கை அழகைகலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டது தான என்றான்.நான் தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன் என்றேன். உடனே அவன், ஏன் நீதர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்? என்றான். என் நோக்கம் இஸ்லாத்தைபிறருக்கு எடுத்து இயம்புவது என்றேன். உடனே அவன் இல்லை உன் நோக்கம் உன்னைஎல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன்அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்தவேலையை செய என்றான்.

நான் இமாம் அஹமது இப்னு ஹன்பல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்குஅவன் அவர் மக்களை குர்ஆன் மற்றும் சுன்னத்தின் பக்கம் அழைத்து என்னை எதிர்த்தார்என்றான்.நான் இமாம் இப்னு தைமிய்யாவை பற்றி என்ன சொல்ல விரும்புகிறாய்? என்றேன்.அதற்குஅவன் அவருடைய வார்த்தைகள் என் தலையை பிளக்கின்றன. என்றான்.நான் இமாம் புகாரி எப்படி? என்றேன். அதற்கு அவன் அவர் தொகுத்த ஹதீஸ் கிதாப் என்வீட்டில் இருந்தால் என் வீட்டையே கொளுத்தி விடுவேன என்று கோபமாகக் கூறினான்.நான் ஸலாவுதீன் அய்யூபி எப்படி? என்றேன். அதற்கு அவன் அவரைப் பற்றி பேசாதே.என்னையும், என் தோழர்களையும் கேவலப்படுத்தி, எங்களை மண்ணோடு புதைத்தார் எனவெறுப்போடு கூறினான்.நான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என இழுத்தேன். அதற்கு அவன், நீ என்னைகோபப்படுத்துகிறாய். அவருடைய பேச்சும், எழுத்தும் எரி நட்சத்திரம் போன்று என்னைசுட்டெரிக்கிறது எனக் கத்தினான்.

நான் அல் ஹஜ்ஜாஜ் பற்றி? என இழுத்தேன். அதற்கு அவன் அவர் போன்று இன்னும் 1000மனிதர்கள் வரவேண்டும். அவர் தன் நடவடிக்கைகள் மூலம் என்னையும், என்தோழர்களையும் சந்தோஷப்படுத்தியது போன்று யாரும் செய்யவில்லை என்று உற்சாகமாகக்கூறினான்.நான் பிர்அவ்ன் எப்படி? என்றேன். அதற்கு அவன் அவனுக்கு என் ஆதரவு உண்டு. அவன்வெற்றி பெற விரும்பினேன் என்றான்.நான் அபு ஜஹ்ல் பற்றி என்ன நினைக்கிறாய்? எனப் பேச்சை மாற்றினேன்.அதற்கு அவன், அப்படிக் கேளு. நானும், அவனும் உடன் பிறவா சகோதரர்கள் என்றுஉற்சாகமாகக் கூறினான்.நான் அபூ லஹப் எப்படி? என்றேன். அதற்கு அவன் நாங்கள் என்றென்றும் இணைபிரியாததோழர்கள் என்றான்.நான் லெனின் எப்படி? என்றேன். அதற்கு அவன். என் சிறந்த சீடர், ஸ்டாலின் என்ற என்சிறந்த தளபதியை உருவாக்கினார். என்றான்.

நான் மஞ்சள் பத்திரிக்கைகள் பற்றி? என இழுத்தேன். உடனே அவன் அவை தான் என்வேத புத்தகங்கள் என்றான்.நான் மார்க்கப் பத்திரிக்கைகள் பற்றி என்ன கூறுகிறாய்? என்றேன். அதற்கு அவன் அல்-ஜன்னத், சமரசம், விடியல் வெள்ளி, அல் முபீன், ஒற்றுமை, முஸ்லிம் பெண்மணி பற்றித்தானே கேட்கிறாய்? அவர்கள் எல்லாம் காசு சம்பாதிக்கும் எழுத்து வியாபாரிகள். அவற்றைநான் படிப்பது வீண் விரயம் என்றான் கேலியாக.

நான் டி.வி., சாடிலைட் சேனல் பற்றி என்றேன். அதற்கு அவன் அவை தான் மக்களைஎன்றென்றும் என் ஞாபகத்திலேயே வைத்திருப்பவை என்றான்.நான் பிபிசி, சிஎன்என் சேனல் பற்றிக் கூறு என்றேன். அதற்கு அவன் அவை மட்டுமல்லசன், ஜெயா, விஜய், ஸ்டார், ஜீ, ஸஹாரா, தமிழன், சோனி, பொதிகை, தூர்தர்ஷன், ராஜ்இவையெல்லாம் என் ஆயுதங்கள். அதன் மூலம் தான் விஷம் தடவிய தேனை மக்கள்பருகுமாறு செய்கிறேன். முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை இவைமூலமே வெற்றிகரமாக நடத்தி வருகிறேன் என்று பெருமையாகக் கூறினான்.

நான் காபி ஷாப், இண்டர்நெட் கஃபே எப்படி? என்றேன். அதற்கு அவன் அல்லாஹ்வின்நினைவிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் மக்களைத் திசை திருப்பும் எந்த செயலையும் நான்வரவேற்கிறேன் என்றான்.நான் சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?என்றேன்.அதற்கு அவன் அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப் , என்றான்.

நான் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் என்எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து,அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன் என்று பெருமையோடு கூறினான்.நான் இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் நீ புறம்பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னைநோகடிக்காதே என்றான்.நான் வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்? என்றேன். அதற்கு அவன் அதுவே என் புகுந்தவீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும்அதுவே என்று பெருமையாகக் கூறினான்.

நான் மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் பேராசை, சந்தேகம்,வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியானநம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது,நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்.ஆமாம், என்ன நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்றுவினவினான்.

சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்? என்று நான் வினவினேன். அதற்குஅவன் அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம்மூலம் தான் என்றான்.

சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்? என்று நான்வினவினேன்.அதற்கு அவன் அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும்,கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடிசெய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன் என்றான்.

நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது? எனப் பேச்சை மாற்றினேன். அதற்கு அவன் சபாஷ்.நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்னதெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள்அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது.ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது.ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச்செய்யலாம். 1. தந்தை, 2. சகோதரன், 3. கணவன், 4. மகன். சுருங்கச் சொன்னால் ஒருபெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம் என உற்சாகம் கொப்பளிக்கக்கூறினான்.

நான் இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்? என்றேன். அதற்கு அவன் சினிமா, இசை,இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடைஉடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும்ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான் என்றான்.

நான் புதிய கலாச்சாரம் பற்றி கூறேன்என்றேன். அதற்கு அவன் என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும்பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களைஇஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே? என்றான்.

நான் மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்? என்றேன். அதற்கு அவன் அது தான்என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமேவௌ;வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள் என்றான்.

நான் ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய் என்றேன்.அதற்கு அவன் கோபமாக அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என்பலத்தைக் குலைத்த சதிகாரர்கள்.நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான்பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள் திக்ர்செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம்பாதுகாவல் தேடுகிறார்கள் என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.

நான் காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்? என்று கேட்டேன்.அதற்கு அவன் உற்சாகமாக, நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின்இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாகஎன் வலையில் வீழ்ந்தான் என்று கூறினேன்.நான் பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான் என்று கேட்டேன்.அதற்கு அவன், நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னைஎதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என்அடிமையானான் என்று கூறினான்.

நான் ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்? என்று கேட்டேன்.அதற்கு அவன் அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்புதேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன் எனக்கூறினான்.நான் உன் துஆ எது? என்றேன். அவன் சினிமா பாடல்கள் என்றான்.நான் உன் குறிக்கோள் என்ன? என்றேன். அதற்கு அவன் மக்களிடையே பொய்யானநம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது என்றான்.

நான் எது உன்னை அழிக்கும்? என்று கேட்டேன். அதற்கு அவன், குர்ஆனில் உள்ளஆயத்துல் குர்ஸி 2வது அத்தியாயம் 255வது வசனம் யார் ஓதுகிறார்களோ அவர்களைஎன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான் என்றுகூறினான்.நான் அடடே! அப்படியா, எனக் கூறிவிட்டு ஆயத்துல் குர்ஸியை ஓத ஆரம்பித்தேன். உடனேஷைத்தான் கூக்குரலிட்டவாறு, அவ்விடத்தை விட்டு வெருண்டோடி மறைந்தான்.
மூலம் - - ஷேக் அயாத்

அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன் திருமறையாம் குர்ஆனில் கூறுகின்றான்,நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்.ஷைத்தானுடைய அடிச்சுவட்டைக் கூட பின்பற்றாதீர்கள். ஏனெனில், அவன் உங்களுக்குபகிரங்க விரோதி ஆவான் குர்ஆன் 2 : 208ஆகவே, இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும்ஷைத்தானுடைய பாதையில் செல்வதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம்.நம்முடைய மற்ற சகோதர, சகோதரிகளையும் அங்ஙனம் செயல்பட அறிவுறுத்துவோம்.

நன்றி;அஹ்மது ஸாஹிபு