அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஞாயிறு, 28 டிசம்பர், 2008

இஸ்லாமிய புத்தாண்டும்-இதர புத்தாண்டுகளும்.




உலக அளவில் இனரீதியாக மதரீதியாக புத்தாண்டுகள் ஏற்படுத்தப்பட்டு அவை கொண்டாடப்பட்டு வருவதை நாம்பார்க்கிறோம். தமிழ் மொழியை முன்னிலைப்படுத்தி சித்திரை முதல்தேதி கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு இப்போது தைமாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. உலகில் பெரும்பாலோரால் கொண்டாடப்படும் ஆங்கில புத்தாண்டு ஜனவரி முதல்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பெரும்பாலோர் நடத்தும் கூத்துக்கள் சொல்லி மாளாது. நட்சத்திர ஹோட்டல்களில், மதுபார்களில், சூதாட்டக்கிளப்புகளில் இவர்களது புத்தாண்டுகள் நிறைவடையும்.


கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற நம் நாட்டிலேயே இந்த லட்சனம் எனில், மேற்கத்திய நாடுகளை சொல்லவே வேண்டாம். பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் மேலே உள்ள படத்தை பார்த்தே நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.ஆனால் தனக்கென உள்ள புத்தாண்டை மறந்த சமுதாயம் முஸ்லீம் சமுதாயம் மட்டுமே.

நம்முடைய முஸ்லிம்களில் பெரும்பாலோர் ஆங்கில புத்தாண்டு கொண்டாடிவருகிறார்கள். அன்றைய தினம் கணினி, மொபைல் மூலமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதையும் பார்க்கிறோம். பெரும்பாலோர்க்கு ஹிஜ்ரி ஆண்டு என்றால் பத்திரிகைகளில் போடுவதற்கு மட்டுமே என எண்ணிக்கொண்டுள்ளனர். ஆங்கில ஆண்டையும், மாதங்களையும் சரியாக நினைவில் வைத்துள்ள நம்மவர்களிடம், ஹிஜ்ரி ஆண்டையும் இஸ்லாமிய மாதங்களின் பெயரையும் கேட்டால் முழிப்பவர்கள்ஏராளம். நம்சமுதாய பெண்களில் இஸ்லாமிய மாதங்களின் பெயரை கேட்டால், முஹர்ரம் சபர் என்று பதில்வராது மைதீன் ஆண்டவுக பிறை, ஏர்வாடி இபுரமுசா பிறை என்று பட்டியல் போடுவார்கள்.

ஹிஜ்ரி1430 துவங்கும் நாம், ஹிஜ்ரிஆண்டு உருவான வரலாற்றை அறிந்துகொள்வது அவசியமாகும்.நபி[ஸல்]அவர்கள் காலத்தில் ஹிஜ்ரி ஆண்டு நடைமுறையில் இருக்கவில்லை.நபி[ஸல்]அவர்களின் மறைவுக்கு பின் இரண்டாவது அமீராக பொறுப்பேற்ற சொர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட உமர்[ரலி]அவர்கள், நமக்கென ஒரு நாள்காட்டி அவசியமென கருதி ஏனைய சகாபாக்களோடு ஆலோசனை செய்தார்கள். எந்த நாளை முன் வைத்து நாம் ஆண்டை உருவாக்குவது என்ற விவாதத்தில்,

ரசூல்[ஸல்] பிறந்த நாளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உருவாக்கலாம் என்று ஒருசாராரும்,

ரசூல்[ஸல்]நபியாக்கப்பட்ட நாளை முன்வைத்து உருவாக்கலாம் என்றுஒரு சாராரும்,

இஸ்லாத்திற்காக நடைபெற்ற முதல் தியாகப்பயனமான அபிசீனியா ஹிஜ்ரத் நாளை முன்வைத்து உருவாக்கலாம் என்று ஒருசாராரும்,

ரசூல்[ஸல்]அவர்கள் மதீனா ஹிஜ்ரத் நாளை முன்வைத்து ஒருசாராரும் கருத்து கூற இறுதியாக நபியவர்களின் மதீனா ஹிஜ்ரத் நாளை மய்யமாக கொண்டு உமர்[ரலி] அவர்கள் ஹிஜ்ரி ஆண்டை உருவாக்கினார்கள். அன்றைய சகாபாக்கள் தொட்டு இன்றைய முஸ்லீம் உலகம்வரை இதை அங்கீகரித்து வந்துள்ளது.


ஹிஜ்ரி 1430ல்.அடியெடுத்து வைக்கும் நாம், இந்த நாளை மற்றவர்களைப்போல் கொண்டாடவேன்டியா நாளா? என்றால் இல்லை! மாறாக சபதமேர்க்கும் நாளாகும்.


சத்திய இஸ்லாம் மார்க்கத்திற்காக நபியவர்களும், சகாபாக்களும் தான் பிறந்த ஊரை/உறவை/சொத்தை இழந்தார்களோ அதுபோல் இந்த மார்க்கத்திர்க்காக எதையும் இழப்போம்!

சத்திய மார்க்கத்திற்காக எங்கள் இன்னுயிரை இழக்கும் நிலைவந்தால் அதற்கும் நாங்கள் தயார்!

அல்-குர்'ஆணையும்-ஹதீசையும் மட்டும் பின்பற்றும் உண்மை முஸ்லீம்களாக வாழ்வோம்!

இம்மையை விற்று மறுமையை விலைக்கு வாங்கிய சத்திய சகாபாக்களை உயர்வாக மதிப்போம்! அவர்களை நையாண்டி செய்பவர்களை புறக்கணிப்போம்!

அல்-குர்'ஆணுக்கும், ஹதீஸுக்கும் உட்பட்ட கருத்தை எவர் சொன்னாலும் ஏற்போம்! இவையிரண்டுக்கும் மாறுபட்ட கருத்தை எவர் சொன்னாலும் புறக்கணிப்போம்!

என்றைக்கும் எந்த தனிமனிதருக்காகவோ/இனத்திற்காகவோ பரிந்து கொண்டு நீதிக்கும்,நியாயத்திற்கும் மாற்றமாக நடக்கமாட்டோம்!

இதுதான் இந்த புத்தாண்டின் நமது உறுதி மொழியாக இருக்கவேண்டும்.
படம்[மேல்]நன்றி;தினத்தந்தி.
குறிப்பு;இந்தபடத்தை மேற்கத்திய நாடுகளின் கலாச்சார சீரழிவை காட்டுவதற்காகவே நமது தளத்தில் வெளியிட்டுள்ளோம்.

கருத்துகள் இல்லை: